விருதுநகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள திமுக கவுன்சிலர்கள் இன்று மாலை வரை அங்கேயே தங்கியிருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் வாக்கெடுப்பில் அவர்கள் பங்கேற்க வாய்ப்புகள் இல்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
வீட்டில் இருந்து வேலை பார்ப்பதைவிட தொழிலாளர்கள் ஆபீசுக்கு வந்து வேலை பார்ப்பதால் அவர்களின் வேலைத் திறனும், கூட்டு முயற்சியும் அதிகரிப்பதாக நிறுவனங்கள் கருதுகின்றன.
காவல்துறையினருக்கு எதிரான கதை என்றாலும் அவர்கள் பணியில் சந்திக்கும் பிரச்சினைகள், எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடிகள் என பல விஷயங்களை படம் தொட்டுச் செல்கிறது.
என் மீது கொண்ட அன்பால் உலக நாயகன் என்று என்னை அழைக்கிறீர்கள். எந்தவொரு தனி மனிதனையும் விட சினிமா கலை பெரியது. அதனால், பட்டங்களையும், அடைமொழிகளையும் துறக்க முடிவு செய்துள்ளேன்.
இதனையடுத்து அமெரிக்கா மீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்த பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்களும் பங்கேற்றுள்ளனர்.
இலங்கையில் புதிய பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.