No menu items!

வருத்தத்துடன் மும்பைக்கு கிளம்பிய நயன்தாரா!

வருத்தத்துடன் மும்பைக்கு கிளம்பிய நயன்தாரா!

காதலர்களாக இருந்து மனைவி – கணவன் என ப்ரமோஷன் ஆன பிறகு நடப்பதெல்லாம் சோதனைகளாகவும், வேதனைகளாகவும் இருப்பதால் நயன்தாரா ரொம்பவே அப்செட்டாம்.

திருமணத்திலும் உறவினர்களால் மன வருத்தம். வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பெற்றுகொண்டதில் சர்ச்சை. லைகா சுபாஷ்கரனிடம் நேரடியாக பேசி வாங்கிய அஜித்62 பட வாய்ப்பு பறிபோனதில் ஏமாற்றம். தயாரித்த கனெக்ட் படம் சரியான வரவேற்பை பெறாமல் போனதால் கவலை. இப்படி திரும்பிய பக்கமெல்லாம் சோதனைகள்.

இதனால் கோயில் கோயிலாக செல்லும் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவும் செல்கிறாராம்.

ஆனாலும் மனது அமைதியாக சூழலில், மீண்டும் ’ஜவான்’ ஷூட்டிங்கில் கலந்து கொள்ள மும்பைக்குப் பறந்துவிட்டார் நயன்தாரா.


சூர்யாவுடன் இணையும் சீதா ராம் இயக்குநர்?

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் கோவாவில் நடைபெற்றது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த ‘வாடிவாசல்’ ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை.

இந்நிலையில் தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சீதா ராமம்’ படத்தின் இயக்குநர் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

‘அந்தால ராக்சஷி’, ‘சீதா ராம்’ என இரண்டுப் படங்களும் அதன் மேக்கிங் ஸ்டைலுக்காக பாராட்டுகளைப் பெற்ற படங்களாகும். இந்தப் படங்களைப் பார்த்துதான் சூர்யா ஹனு ராகவப்புடி இயக்கத்தில் நடிக்கும் யோசனையில் இருக்கிறாராம்.

ஹனு ராகவப்புடி, ராம் சரணுக்கும், நாநிக்கும் கதை சொல்லியிருப்பதாகவும், அந்தக் கதை நன்றாக இருந்தாலும் இவர்கள் இருவருக்கும் செட்டாக வில்லையாம்.ஆனால் அதே கதை சூர்யாவுக்குப் பிடித்திருப்பதால் இந்தக் கதையில் சூர்யா நடிக்க வாய்ப்பிருப்பதாக பேச்சு அடிப்படுகிறது.

ஹனு ராகவப்புடியின் இந்த கதையில் சூர்யா நடித்தால், இது சூர்யா நடிக்கும் முதல் நேரடி தெலுங்குப்படமாக அமையும். தனது தெலுங்கு மார்க்கெட்டை பிடிக்க சூர்யாவுக்கு இந்த ப்ராஜெக்ட் ஒரு வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பாலிவுட் நடிகைகள் சம்பளம் 5 கோடி.

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயின்களுக்கு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா என வரிசையாக ஹீரோயின்களுக்கு திருமணமாகிவிட்டதால் இங்கு ஹீரோக்கள் அவர்களுடன் நடிக்க தயங்குகிறார்களாம்.

இதனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய வரவுகளான பூஜா ஹெக்டேவுக்கு ‘ஃபீஸ்ட்’ சரியாக போகவில்லை. அதிகம் எதிர்பார்த்த ‘வணங்கான்’ படத்திலிருந்து கீர்த்தி ஷெட்டி விலகிவிட்டார். ப்ரியங்கா மோகன் இன்னும் அந்த இடத்திற்கு வரவில்லை.

இதனால் முன்பு போல பாலிவுட் ஹீரோயின்களுக்கு வலை வீச ஆரம்பித்திருக்கிறார்கள். பாலிவுட் ஹீரோயின்களை நடிக்க வைத்தால் பான் – இந்தியா படங்களாக வியாபாரம் பண்ணலாம் என்பதும் இதற்கு ஒரு காரணம்.

அப்படிதான் இப்போது ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள்.

ஜான்வி கபூர் இங்கே ஒரு படம் கூட பண்ணாவிட்டாலும், 5 கோடி சம்பளம் கேட்கிறாராம். இவர்தான் இப்படியென்றால் அங்கிருந்து இங்கே நடிக்க வரும் பாலிவுட் நடிகைகள் 5 கோடிதான் சம்பளம் என்று பேச ஆரம்பிக்கிறார்களாம்.

இதனால் 5 கோடி என்பது ஆரம்ப சம்பளமாக இருக்கிறது என்று டென்ஷனில் இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...