கமர்ஷியல் ஹீரோக்களின் தேர்வாக, இயக்குநர்களின் விருப்பமாக, முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கும் இந்த டாப் 5 நடிகைகளைப் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்களை பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி 35 நிமிட தொலைபேசியில் பேசியுள்ளார். இந்த உரையாடல் குறித்து வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.
கடக ராசியில் பிறந்த விஜய்யின் அந்தஸ்து சமூகத்தில் உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியடையும். மேலும் பெரிய இடங்களில் இருந்து படவாய்ப்புகள் குவியும். மனதளவில் உற்சாகம் அதிகரிக்கும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
டிட்வா புயல் வலுவிழந்து தொடர்ந்து சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளதால் கடந்த 48 மணிநேரமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி...
2024ஆம் ஆண்டுக்கான விருது கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கப்படும் என மியூசிக் அகாடமி அறிவித்தது. இதை எதிர்த்து எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் ஸ்ரீனிவாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
காசா அமைதி உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எகிப்து அதிபர் அல் சிசி ஆகிய இருவரும் நேற்று கடைசி நேரத்தில் அழைப்பு விடுத்துள்ளனர்.
100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த வீட்டில், சில காலங்களுக்கு முன்புவரை அடூர் கோபாலகிருஷ்ணனின் சகோதரியும் அவரது குடும்பத்தினரும் வசித்துவந்தனர். சகோதரியின் இறப்புக்கு பின்னர் அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. இதனால் வீடு பாழடைந்தது. இதைத்தொடர்ந்து சகோதரியின் மகன், அந்த வீட்டை இடிக்க திட்டமிட்டார்.
அமேசான் ப்ரைம், அந்தந்த பிராந்திய மொழி படைப்புகளைப் பற்றிய பிரச்சாரத்தை திரைப்பட நட்சத்திரங்களை வைத்து முன்னெடுத்து இருக்கிறது. இதற்காக மும்பையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என முக்கிய மொழிகளின் திரைப்பட நட்சத்திரங்களை வரவழைத்து, ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும் வகையிலான மாபெரும் நிகழ்வை நடத்தியிருக்கிறது.
சென்னைப் பல்கலைக்கழகம் நீண்ட காலம் ‘முதலியார் யுனிவர்சிட்டி’ என்றுதான் உலகெங்கும் அறியப்பட்டது! 25 ஆண்டுகள் அதன் துணைவேந்தராக ஆட்சி செய்தார் டாக்டர் லட்சுமணசாமி முதலியார்.
ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடரில் திலக் வர்மாவை ஆடவைக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீர்ர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
யாருமே எதிர்பார்க்காத வகையில் அந்த ப்ராஜெக்ட் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. ’தங்கலான்’ பற்றிய தகவல்கள் வெளிவந்த பிறகு, இப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட காத்திருக்கிறார்களாம்.