No menu items!

சரத்குமாருக்கு வாய்ப்பு கொடுத்த விஜயகாந்த்

சரத்குமாருக்கு வாய்ப்பு கொடுத்த விஜயகாந்த்

சரத்குமார், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன் என பலரை தன் படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தியவர் சரத்குமார். இதில் சரத்குமாரை அவர் அறிமுகப்படுத்திய கதை சுவாரஸ்யமானது.

புலன் விசாரணை படத்தில் நடிப்பதற்கு முன், ‘முத்து எங்கள் சொத்து’ உள்ளிட்ட பல படங்களில் சிறு வேடத்தில் நடித்திருக்கிறார் சரத்குமார். இதைத்தொடர்ந்து கார்த்திக்கை நாயகனாக வைத்து ‘கண் சிமிட்டும் நேரம்’ படத்தையும் அவர் தயாரித்துள்ளார். இந்த படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்திருக்கிறார் சரத்குமார். இந்த படத்தைத் தொடர்ந்து மிஸ்டர் கார்த்திக் என்ற படத்தை சரத்குமார் தயாரித்துள்ளார். கார்த்திக் நாயகனாக நடித்த இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் நேபாளத்தில் நடந்துள்ளது.

மிஸ்டர் கார்த்திக் படம் தோல்வியடைந்ததால் சரத்குமார் கடனாளி ஆனார். அவர் கடன்காரர்களுக்கு பயந்து ஓடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில், கண் சிமிட்டும் நேரம் படத்தில் ஒப்பனையாளராக பணியாற்றியவர், புலன் விசாரணை படத்தில் பணியாற்ற சென்றிருக்கிறார். இந்த படத்துக்கான ஒரு சிறந்த வில்லன் நடிகரை அப்போது விஜயகாந்த் தேடிக்கொண்டு இருந்தார்.

அப்போது விஜயகாந்த்திடம் சரத்குமாரின் சில புகைப்படங்களை சரத்குமார் காட்டியிருக்கிறார். “இவர் நன்றாக நடிப்பார். சண்டைப் பயிற்சியும் பெற்றவர். நீங்கள் தேடும் வேடத்துக்கு இவர் பொருத்தமானவராக இருப்பாரா பாருங்கள் என்று கேட்டுள்ளார்.

விஜயகாந்த்துக்கும் சரத்குமாரை பிடித்துப் போய் இருக்கிறது. புது இயக்குநர் இயக்கும் படம் என்பதால், பிரபலமான வில்லன் நடிகர் யாரையாவது போடலாம் என்று சிலர் விஜயகாந்த்துக்கு ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள். ஆனால் விஜயகாந்த் அந்த வாய்ப்பை சரத் குமாருக்கு கொடுத்திருக்கிறார். அதன்மூலம் அவருக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளார்.

படத்தில் வாய்ப்பு அளித்த்தைப் போலவே சரத்குமார் சாயாதேவியை திருமணம் செய்தபோதும் அவருக்கு பல உதவிகளைச் செய்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...