No menu items!

தயாரிப்பாளர்களுக்கு பயம் காட்டும் ஸ்ரீநிதி ஷெட்டி!

தயாரிப்பாளர்களுக்கு பயம் காட்டும் ஸ்ரீநிதி ஷெட்டி!

’கேஜிஎஃப்’ வரிசைப் படங்கள் இந்திய சினிமாவில் பல்வேறு சாதனைகளைப் படைத்தன. இந்தப்படத்தில் நாயகனாக நடித்த ‘யாஷ்’ தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. நல்ல கதைக்காக காத்திருக்கிறார் என்கிறார்கள்.

’கேஜிஎஃப்’ மாதிரி படங்களை கொடுத்துவிட்டு, அதற்கும் மேல் எந்த மாதிரியான கதையில், படத்தில் நடிப்பது என்ற குழப்பம்தான் அதற்கு காரணம்.

ஆனால் தற்போது அவர் ஹிந்தி எடுக்கவிருக்கும் மகாபாரதம் படத்தில் நடிக்க இருப்பதாகவும், இதில் நடிக்க 100 கோடி சம்பளம் கேட்பதாகவும் ஒரு தகவல் கசிந்திருக்கிறது.

யாஷைப் போல்தான் கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியும் தனது அடுத்தப்படம் குறித்த எந்த அறிவிப்பை வெளியிடவில்லை. இவருக்கும் படங்கள் எதுவும் கைவசம் இருப்பதாகவும் தெரியவில்லை.

கேஜிஎஃப் நாயகன் இப்படி என்றால், கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்கும் இதே பஞ்சாயத்துதானா என்றால் இல்லை.

ஸ்ரீநிதி ஷெட்டி, கேஜிஎஃப் படங்களுக்குப் பிறகு விக்ரமுக்கு நடித்த படம் ’கோப்ரா’. இந்தப் படம் சரியாக ஓடவில்லை. ஆனாலும் இங்கே தமிழில் நடிக்க வைக்க அவரை தயாரிப்பாளர்கள் அணுகியிருக்கிறார்கள். கதை கேட்ட பின்பு எல்லாம் ஒகே சம்பளம் ஜிஎஸ்டி சேர்த்து 1.5 கோடி என்று சொல்ல, திகைத்துப் போயிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

பெரிய நடிகர்கள் படங்களுக்கே வசூல் உத்திரவாதம் இல்லை. இதில் இவருக்கு இவ்வளவு சம்பளமா என்று கதை சொல்ல போனவர்கள் போன வேகத்தில் ஓட்டம் பிடிக்கிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...