No menu items!

பழனி நில முறைகேடுக்கு பின்னால் யார்?

பழனி நில முறைகேடுக்கு பின்னால் யார்?

பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலம் தனியார் பெயருக்கு மாற்றம் பதிவு செய்யப்பட்டதாகப் புதிய அதிகாரியே வந்தாரா? அந்த அலுவலருக்கு அனைத்தையும் மாற்றி சரிபார்த்ததைப் போல, அவருக்கும் யார் அந்த அதிகார மையம்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் சொந்தமான நிலம் தனியார் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது…

“பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலம், வெறும் ரூ.2 கோடி மதிப்பிற்கு தனியார் பெயருக்கு மாற்றப்பட்டிருப்பது என்பதே ஏதோ அலுவலகப் பிழை போல இந்த அரசு சடக்க முயல்வது ஏற்புடையதல்ல.

தவறு நடந்திருப்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டிருப்பதால், இது மிகப்பெரிய ஊழல்!

யார் பெயரில் இந்த நிலம் மாற்றப்பட்டது?

இந்தப் பத்திரப் பதிவு குறித்த விவரங்கள் ஏன் பொதுவெளியில் வரவில்லை? யார் பெயரில் இந்த நிலம் மாற்றப்பட்டது? அந்த நபர் இந்த வழக்கில் குற்றவாளி இல்லையா?

யார் அந்த அதிகார மையம்?

இவ்வளவு பெரிய ஊழல், அதுவும் பழனி முருகப்பெருமானின் சொத்தையே வளைத்து போடும் நோக்கத்தில் நடந்திருக்கிறது. இவ்வளவு பெரிய பத்திரப் பதிவு நடக்கிறது என்றால், அதை ஏதோ ஒரு அதிகார மையம் தான் (பவர் சென்டர்) முன்னின்று இதற்கான உத்தரவுகளைக் கொடுத்திருக்க வேண்டும். தனது ஆட்சியில் தான் மட்டுமே அதிகார மையம் என்று சொன்ன முதல்வர் விஜய், இந்த ஊழலில் பின்னால் உள்ள யார் அந்த அதிகார மையம்?

பத்திரப் பதிவிற்காக புதிய அதிகாரி வந்தாரா?

அதுவும், முதலில் ஒரு சார்பதிவாளர் இதனைப் பதிவு செய்ய இயலாது என மறுத்த நிலையில், அவர் மாற்றப்பட்டு, வேறு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு இந்தப் பத்திரப் பதிவு நடைபெற்றது என்றாலும், இந்தப் பத்திரப் பதிவிற்காகத்தான் புதிய அதிகாரியே வந்தாரா? அந்த அலுவலருக்கு அதிகாரமையே மாற்றிக் காரியத்தை முடிக்கும் அளவிற்கு யார் அந்த அதிகார மையம்?

சிபிஐ விசாரிக்க வேண்டும்

இக்கணை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி விசாரிப்பது என்பது, இந்தக் கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தராது.

எனவே, நேர்மையான விசாரணை நடைபெற, பழனி முருகன் கோயில் சொந்த முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு உடனடியாக இந்த அரசு மாற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...