No menu items!

கமல் மகள் வாங்கிய காஸ்ட்லி அப்பார்ட்மெண்ட்!

கமல் மகள் வாங்கிய காஸ்ட்லி அப்பார்ட்மெண்ட்!

கமல், ஒரு பக்கம் பிக் பாஸ் நிகழ்ச்சி, மறுப்பக்கம் திரைப்படங்கள், இன்னொரு பக்கம் மக்கள் நீதி மய்யம் என ரொம்பவே பரபரப்பாக இருக்கிறார்.

இதனால் அவரது மகள்களான ஷ்ருதி மற்றும் அக்‌ஷரா இருவரும் தங்களுடைய வாழ்க்கையை தனியாக கவனித்து கொள்கிறார்கள்.

இதில் ஷ்ருதி ஹாஸனுக்கு சினிமா மீதும் நடிப்பதிலும் ஆசை. இசை மீது மோகம். தன் அப்பா வயதுடைய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தும், அடுத்தடுத்து படங்கள் அமையவில்லை. இதனால் தன்னுடைய கவனத்தை இப்போது இசை மீது திருப்பியிருக்கிறார். ‘மான்ஸ்டர் மெஷின்’ என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டு இருக்கிறார்.

மற்றொரு மகளான அக்‌ஷராவுக்கு திரையில் தோன்றி ஆடிப்பாடுவதை விட, திரைக்குப் பின்னால் இயங்குவதில்தான் ஆர்வமிருக்கிறது. இதனால் மும்பை பக்கம் ஏறக்குறைய செட்டிலாகிவிட்டார்.

மும்பையில் இருந்தபடியே, அம்மாவின் அரவணைப்போடு அடுத்தடுத்து என்ன செய்வது என யோசித்து வரும் அக்‌ஷரா, இப்போது ஒரு ஆடம்பர அப்பார்ட்மெண்ட்டை வாங்கியிருக்கிறார்.

மும்பையின் மேற்கு புறநகர் பகுதியில் இவர் வாங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட் 2,354 சதுர அடியில் கட்டப்பட்டிருக்கிறது. ஹர் பகுதியில் இருக்கும் ஏக்தா வெர்வ் என்ற இந்த அப்பார்ட்மெண்ட்டில் மொத்தம் 15 மாடி. இதில் 13-வது மாடியில் இருக்கிறது அக்‌ஷராவின் அப்பார்ட்மெண்ட். 3 கார் பார்க்கிங் வசதியும் அக்‌ஷராவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் மாதம் டாக்குமெண்ட்டில் கையெழுத்திட்ட அக்‌ஷரா, இந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு கொடுத்த விலை 15.75 கோடியாம்.

இப்போது அக்‌ஷராவுக்கு வயது 33.


லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் எது?

லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து இயக்கிய ‘லியோ’ தொடர்ந்து பல சர்ச்சைகளுக்குள்ளாகி வருகிறது.

ஆனாலும் லோகேஷ் கனகராஜின் அடுத்தப்படங்கள் பற்றிய் பேச்சுக்கள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்குவதற்கான வேலைகளில் லோகேஷ் இப்போது மும்முரமாகி இருக்கிறார்.

ஆனாலும் அவர் 2019-ல் கார்த்தியை வைத்து இயக்கிய ‘கைதி’ படம் பற்றி செய்திகள் அதிகம் அடிப்படுகின்றன. காரணம், ’லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ என்ற லோகேஷின் சினிமா பாணியின் ஆரம்பமே கைதி படம்தான்.

ரஜினி படம் முடித்தப் பிறகு சூர்யாவை வைத்து ‘ரோலக்ஸ்’ எடுக்கப் போகிறாரா அல்லது கார்த்தியை வைத்து ‘கைதி 2’ எடுப்பாரா என்ற கேள்விகளுக்கு இப்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் லோகேஷ்.

அடுத்து ’கைதி 2’ படம்தான், ஆனால் இந்தப்படத்தின் ஷூட்டிங் 2024 ஜனவரியில் தொடங்கி இருக்க வேண்டியது. ஆனால் இடையில் ரஜினி புகுந்து லோகேஷை தனக்கு படம் பண்ணும்படி கூறிவிட்டார். இதனால் கைதி 2 ஷூட்டிங் திட்டமிட்ட நாளிலிருந்து சில மாதங்கள் தள்ளிப் போயிருக்கிறது.

ஆனால் உண்மையில் லோகேஷ் கைவசம் ‘கைதி 2’ படத்திற்கான கதை, திரைக்கதை முழுமையாக இல்லை. லியோவுக்கு பிறகு எழுத நினைத்த லோகேஷை தனது அடுத்தப் படம் மூலம் கைதி ஆக்கியிருக்கிறார் ரஜினி. இதனால் ரஜினி படம் முடிந்து, லோகேஷூக்கு ’கைதி 2’-க்கான கதை, திரைக்கதை செட் ஆன பின்னரே ஷூட் இருக்குமாம்.

லோகேஷைப் பொறுத்தவரை, ‘கைதி 2’, ‘விக்ரம் 2’ மற்றும் ’ரோலக்ஸ்’ என படங்கள் வரிசையாக இருந்தாலும், முதலில் அவர் ‘கைதி 2’ வைதான் எடுப்பார். அதிலிருந்தே கதாபாத்திரங்கள் அவரது மற்றப் படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதனால் அடுத்த வருடம் ஜூன் மாதவாக்கில் ’கைதி 2’ ஷூட்டிங் தொடங்கலாம் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...