No menu items!

நான்காவது முறையாக அப்பாவாகும் பிரபுதேவா

நான்காவது முறையாக அப்பாவாகும் பிரபுதேவா

பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. முதல் மனைவியின் பெயர் ரம்லத்.

ரம்லத் ஒரு க்ரூப் டான்ஸர். பிரபுதேவா டான்ஸ் மாஸ்டராக வளர்ந்து வந்த காலத்தில், ரம்லத்துடன் காதலில் விழுந்தார். 3 ஆண் குழந்தைகளும் பிறந்தன. அதே வேகத்தில் விவாகரத்தும் ஆனது.

ரம்லத்தை பிரியும் போது அவருக்கு இரண்டு வீடுகள், வங்கிக்கணக்கில் லட்சக்கணக்கான பணம் என செட்டில் செய்தார் பிரபுதேவா.

2008-ல் முதல் மகன் எதிர்பாராமல் உடல்நலமில்லாமல் இறந்து போனார். இதனால் பிரபுதேவா சில வருடங்களாக சிங்கிளாக இருந்துவந்தார். அப்போதுதான் அவருக்கும், நயன்தாராவுக்கும் இடையில் ஒரு ‘இது’ உருவானது நினைவில் இருக்கலாம். ஆனால் அந்த உறவும் உச்சத்திற்குப் போய் நீச்சமானது.

திரும்பவும் சிங்கிளாக வலம்வந்த பிரபுதேவா, ஹிமானி சிங் என்ற பெண்ணைக் காதலிப்பதாக தகவல்கள் வெளியாயின. இந்த ஹிமானி சிங் ஒரு பிஸியோதெரபிஸ்ட். மும்பை பெண்.

கொஞ்சநாட்களிலிலேயே 2020-ல் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இப்போது 50 வயதாகும் பிரபுதேவா நான்காவது முறையாக அப்பா ஆகி இருக்கிறார்.

ஒரு அழகான குட்டி தேவதைக்கு பிரபுதேவா – ஹிமானி சிங் பெற்றோர்கள் ஆகி இருக்கிறார்கள்.

’என் வாழ்க்கையில் இந்த கட்டத்தில், நான் திரும்பவும் ஒரு அப்பாவுக்கான பரிசுடன் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன், என்னை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருப்பதோடு ஒரு முழுமையான உணர்வையும் கொடுத்திருக்கிறது இத்தருணம்’ என்று உற்சாகத்தில் இருக்கிறார் பிரபுதேவா.

தனது குட்டி மகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டுமென பிரபுதேவா விரும்புவதால், தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்வதை கொஞ்ச காலத்திற்கு குறைத்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார்.


சூர்யாவின் பாலிவுட் ஆசை!

சூர்யா – ஜோதிகா ஜோடி தனது குடும்பத்தோடு மும்பையில் செட்டிலானதற்கு காரணம் இப்போது புரிய ஆரம்பித்திருக்கிறது.

‘கங்குவா’ படத்தை 10 மொழிகளில் திரையிட திட்டமிட்டு இருக்கிறார்கள். அடுத்து ஹிந்தியில் நடிக்கவும் சூர்யா திட்டமிட்டு வருகிறார்.

‘ரங் தே பசந்தி’ படத்தை இயக்கிய ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவுடன் இணைவது குறித்து சூர்யா நீண்ட நாட்களாகவே யோசித்து கொண்டிருக்கிறார் என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம். ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவுடன் சேர்ந்து இன்றைக்கு ட்ரெண்ட்டாகி வரும் புராண கதை படத்தில் நடிப்பதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம்.

‘மகாபாரதம்’ புராணக்கதையில் உண்மையான ஹீரோவாக பார்க்கப்படும் ‘கர்ணன்’ கதாபாத்திரத்தை மையமாக வைத்து இரண்டு பாகங்களாக திரைப்படம் எடுக்கும் வேலைகளில் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இறங்கி இருக்கிறார். இதில் கர்ணனாக சூர்யாவை நடிக்க வைக்கும் திட்டமிருப்பதாக பேச்சு அடிப்படுகிறது.

திட்டமிட்டப்படி எல்லாமே சரியாக வருமானால், ‘கங்குவா’ படம் வெளியான பிறகு, 2024-ல் இப்படத்தை ஆரம்பிக்க இருப்பதாகவும் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...