No menu items!

வருத்தத்தில் நயன்தாரா!

வருத்தத்தில் நயன்தாரா!

குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள், கவர்ச்சி தோற்றங்கள், நீச்சல் உடையில் அதிர்ச்சிகள், காதல் கலவரங்கள் என நயன்தாராவின் சினிமா பயணம் ஏற்ற இறக்கதோடு சேர்ந்த பிரம்மாண்டமான வளர்ச்சியை எட்டியது.

முன்னணி கமர்ஷியல் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர், பெண்களை மையமாக கொண்ட படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்ததால் அந்தப் படங்களுக்கான வசூல் அவருக்கென ஒரு வியாபாரத்தை உருவாக்கியது.

இதனால்தான் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என நயன்தாராவை தென்னிந்திய சினிமா உச்சத்தில் கொண்டு சென்றது.

ஆரம்பத்தில் ’லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அடையாளப்படுத்தப்பட்ட போது, அதை நயன்தாரா மறுக்கவும் இல்லை. வெறுக்கவும் இல்லை. ஆனால் சமீபத்தில் வெளியான ‘அன்னப்பூரணி’ படத்தின் ப்ரமோஷனின் போது எடுக்கப்பட்ட நேர்க்காணலில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்தால், 10 பேர் ரசிக்கிறார்கள். மீதி 90 பேர் என்னைத் திட்டுகிறார்கள் என்று மனம் வெதும்பி போய்விட்டார்.

இந்த நிலையில் ‘அன்னப்பூரணி’ படம் எதிர்பார்த்த வெற்றியையும், வரவேற்பையும், வசூலையும் பெறவில்லை. இதனால் நயன்தாரா ஏக வருத்தத்தில் இருக்கிறாராம்.

தன்னுடைய மார்க்கெட் முன்பு இல்லையோ. மக்களுக்கு போரடித்துவிட்டதோ என்று தனக்கு நெருங்கிய வட்டாரத்தில் மனம் தளர்ந்துப் போய் கூறியிருக்கிறாராம். இனியும் நாம் நடித்தால் எடுபடுமா. விஜய், அஜித்திற்கு மட்டுமே ஜோடியாக நடிக்க முடியாது. இரண்டாம் கட்ட நடிகர்களுடன் நடித்தால், படம் ஓடுவது இல்லை. நல்ல கதை வேண்டுமென காத்திருந்தால், மக்கள் மறந்தும் விடுவார்கள். இதனால் என்ன செய்வது என ஒரு குழப்பத்தில் இருப்பதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

தானும் காதல் கணவரும் தொடங்கிய ‘ரவுடி பிக்சர்ஸ்’ மூலம் படத்தயாரிப்பிலும், லிப் பாம் மற்றும் சருமப் பராமரிப்பு தயாரிப்பு நிறுவனத்தின் வியாபாரத்திலும் கவனம் செலுத்தினால் என்ன என்று யோசிப்பதாகவும் கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...