ஈரானியக் கடற்படை முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
அணு ஆயுத சோதனையை கைவிடவும், ஹோர்முஸ் நீரிணையில் விதித்துள்ள கட்டுப்பாடுகளை விலக்கவும் கோரி அமெரிக்கா முன்வந்தது. ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதாக டிரம்ப் எப். 8 ஆம் தேதி அறிவித்தார்.
இந்தப் போரை முடிவையாக நிறுத்த அமெரிக்கா-ஈரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வரும் நிலையில் எப். 10 ஆம் தேதி, ஈரான் மற்றும் அமெரிக்க குழுக்கள் பாகிஸ்தான் வருமாறு அந்த நாடு பிரதமர் ஷஹ்பாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, சனிக்கிழமை பேச்சுவார்த்தை தாமதமாகத் தொடங்கியது.
சுமார் 21 மணிநேரம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதனால், மீண்டும் போர் மூளும் சூழல் உருவானது. அதனைத் தொடர்ந்து ஈரான் எல்லையில் அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிட்டதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஈரானியக் கடற்படை முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா முற்றுகையிட்ட அனைத்து கடற்படைகளுக்கும் இருக்கும் பாதுகாப்பு காரணங்களால் தாக்கி அழிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.



