No menu items!

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

ஈரான் – சீனா இடையேயான இருதரப்பு உறவுகளில் தலையிட வேண்டாம் என்று அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் சனிக்கிழமை நடைபெற்ற போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து, திங்கட்கிழமை காலை ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய நேரப்படி திங்கட்கிழமை இரவு (அமெரிக்கா முற்றுகையிட்ட நேரத்தில்) சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் அன்பில் டாங் ஜா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார்.

“ஈரானுடன் எங்களுக்கு வர்த்தக மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்கள் உள்ளன. எங்கள் விவகாரங்களில் யாரும் தலையிடக்கூடாது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு தேவையான கச்சா எண்ணெயில் 40 சதவீதமும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) 30 சதவீதமும் ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க கடற்படை கைப்பற்றியிருக்கும் சூழலில், சீனாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், “ஈரானியக் கடற்படை முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா முற்றுகையிட்ட அனைத்து கடற்படைகளுக்கும் இருக்கும் பாதுகாப்பு காரணங்களால் தாக்கி அழிக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் எச்சரிக்கையால் மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் உருவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...