சென்னை மாநகரில் நிலப்பரப்பு உள்வாங்குவது குறித்தும், கடல் மட்ட உயர்வு குறித்தும் எச்சரிக்கும் புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
சென்னை மாநகரில் நிலப்பரப்பு உள்வாங்குவது குறித்தும், கடல் மட்ட உயர்வு குறித்தும் அதிர்ச்சியூட்டும் புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. குறிப்பாக குறிப்பாக சென்னை நகரில் 5 முக்கிய பகுதிகள் நாள்தோறும் உள்வாங்கி வருவதாக ஐ.ஐ.எஸ்.இ.ஆர் மொஹாலி ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு எச்சரிக்கிறது.
சென்னைக்குக் கீழே உள்ள நிலப்பரப்பு ஆண்டுக்கு 1.5 செ.மீ வரை தாழ்ந்து வருவதாகவும், அதே வேளையில் கடலோரக் கடல் மட்டம் ஆண்டுக்கு 2.8 மி.மீ உயர்ந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதன்படி போரூர், மதுரவாயல், கொடுங்கையூர், சேப்பாக்கம், சென்னை விமான நிலையம் மற்றும் பனையூர் ஆகிய பகுதிகள் ஆண்டிற்கு ஆண்டுக்கு 3 மில்லி மீட்டர் முதல் 15 மில்லி மீட்டர் வரை நிலத்தில் உள்வாங்கி (Land Subsidence) செல்வதாக ஐ.ஐ.எஸ்.இ.ஆர் மொஹாலி ஆராய்ச்சியாளர்களின் அதிர்ச்சியூட்டும் புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பூமிக்கு அடியில் உள்ள மென்மையான களிமண், வண்டல் மண் மற்றும் மணல் ஆகியவற்றின் அழுத்தம், உள்ளூர் புவியியல் அமைப்புகள் மற்றும் நகரக்கட்டமைப்புகளின் அதிகப்படியான பாரம் ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்களாக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
மிகவும் பாதிப்படைந்த பகுதிகளான போரூர் மற்றும் மதுரவாயல் இடையே உள்ள 18 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதியில்தான் நிலம் உள்வாங்குதல் மிக அதிகமாகப் பதிவாகியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. போரூர் ஆண்டிற்கு 15 மி.மீ, மதுரவாயல் ஆண்டிற்கு 13 மி.மீ, கொடுங்கையூர் ஆண்டிற்கு 10 மி.மீ, சென்னை விமான நிலையம் ஆண்டிற்கு 3 மி.மீ முதல் 10 மி.மீ வரையும், சேப்பாக்கம் மற்றும் பனையூர் ஆண்டிற்கு 3 மி.மீ முதல் 8 மி.மீ வரையும், பெரம்பூர் மற்றும் பாலவாக்கம் பகுதிகளில் ஆண்டுக்கு 2 மி.மீ முதல் 4 மி.மீ வரையும் நிலம் சற்று உயர்வது ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக போரூர் மற்றும் மதுரவாயிலுக்கு இடைப்பட்ட பகுதியில் 18 சதுர கிலோ மீட்டர் பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டு ஆண்டுக்கு 15 மில்லி மீட்டர் வரை நிலம் மூழ்கி வருகிறது.
சென்னை விமான நிலையம் மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளும் ஆண்டுக்கு 3 மில்லி மீட்டர் முதல் 10 மில்லி மீட்டர் வரை நிலம் உள்வாங்கின்றன.
அதாவது கடல் நீர்மட்டம் ஆண்டிற்கு சுமார் 2.8 மி.மீ உயரும் வேகத்தை விட, சென்னையின் நிலப்பகுதி உள்வாங்கும் வேகம் 5 மடங்கு அதிகமாக உள்ளது.
நிலம் உள்வாங்குவதோடு, கடல் நீர்மட்டம் உயர்வு மற்றும் புயல் சமயங்களில் ஏற்படும் கடல் அலைகளின் சீற்றம் போன்றவை இணைந்து சோழிங்கநல்லூர், சித்தாலப்பாக்கம், அடையாறு, தண்டையார்பேட்டை மற்றும் ஈ.சி.ஆர் (ECR) போன்ற தாழ்வான பகுதிகளைக் கடுமையான வெள்ளப் அபாயத்திற்கு உள்ளாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தி.நகர் மற்றும் மாதவரம் போன்ற உள்நாட்டுப் பகுதிகளிலும் கடல் சீற்றத்தின் போது வெள்ளம் சூழும் அபாயம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
மென்மையான களிமண் தரை, புவியியல் காரணிகள் மற்றும் அதிவேக நகரமயமாக்கலின் எடையே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.



