No menu items!

கமலுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்!

கமலுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்!

ஏறக்குறைய 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமலும், மணிரத்னமும் ‘தக் லைஃப்’ படம் மூலம் இணைகிறார்கள்.

இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த ஈகோ இப்போது இல்லை. இதற்கு காரணம் கமல். வயது ஆக ஆக, கமலிடம் இப்போது ஏராளமான மாற்றங்கள். அதில் ஒன்றுதான் மீண்டும் துளிர்த்த மணிரத்னம் உடனான நட்பு.

இருவரும் முன்பை விட இப்போது மிக அதிகம் நெருங்கி இருப்பதால், ‘தக் லைஃப்’ படவேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெகு விரைவிலேயே ஷூட்டிங்கை தொடங்க வேண்டுமென கமல் தரப்பும், மணிரத்னம் தரப்பும் விரும்புகிறதாம்.

இதனால் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களைத் தேர்வு செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தப் படத்தில் ஹீரோயின் யார் என்ற கேள்விக்குதான் இன்னும் பதில் கிடைத்தப்பாடில்லை.

ஆரம்பத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். மணிரத்னம் படங்களில் இதுவரை நடிக்காததால் நயன்தாரா இந்தப் படத்தில் இணைய ஆர்வமாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அது ஒரு பக்காவான கிசுகிசுதான் என்றாகிப் போனது.

அடுத்து ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்ததால் மீண்டும் த்ரிஷாவையே கமலுக்கு ஜோடியாக நடிக்க வைக்க திட்டமிருக்கிறது என்று ஒரு தகவல் கசிந்தது. ’தக் லைஃப்’ படத்தில் த்ரிஷா நடிப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் இப்போது அவரும் கமலுக்கு ஜோடி இல்லை என்கிறார்கள்.

வழக்கம் போல் தனது ஃபேவரிட் ஹீரோயினான ஐஸ்வர்யா ராயைதான் கமலுக்கு ஜோடியாக நடிக்க வைக்க மணிரத்னம் திட்டமிட்டு இருப்பதாகவும் ஒரு கிசுகிசு கசிந்து இருக்கிறது.

மணிரத்னம் என்றதும் ஐஸ்வர்யா ராய் உடனே ஒகே சொல்லியிருக்கிறார். ஐஸ்வர்யா ராய் என்றதும் கமலும் ஒகே சொல்லிவிட்டார் என்றும் கூறுகிறார்கள். ஐஸ்வர்யா ராய்க்கு இப்படத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பது குறித்து இன்னும் தகவலும் வெளியாகவில்லை.


அட்லீயா நெல்சனா குழப்பத்தில் புஷ்பா நாயகன்!

தென்னிந்தியாவில் இன்று அதிகம் உச்சரிக்கப்படும் மூன்று பெயர்கள் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன்.

இவர்கள் மூவரும் கொடுத்த ஹிட் படங்கள் இவர்களை தெலுங்குப் பக்கம் இழுத்துப் போடுமளவிற்கு நிலைமையை மாற்றியிருக்கின்றன.

‘புஷ்பா 2’ படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜூன், இந்தப்படத்திற்குப் பிறகு வேறெந்த படங்களிலும் இன்னும் ஒப்பந்தம் ஆகவில்லை. புஷ்பாவின் மூலம் கிடைத்த மவுசை தக்க வைக்கும் வகையில் அடுத்தப் படமும் அமைய வேண்டுமென விரும்புகிறார்.

இதனால்தான் லோகேஷ், அட்லீ, நெல்சன் ஆகிய மூவரையும் சந்தித்து பேசி இருக்கிறார் அல்லு அர்ஜூன். இந்த மூவரில் யாரை தனது அடுத்தப் படத்திற்கு இயக்குநர் ஆக்கலாம் என்ற குழப்பத்தில் இருக்கிறாராம்.

இதில் லோகேஷ் கனகராஜ் அடுத்தப்பட வேலைகளில் இறங்கிவிட்டதாலும், அடுத்தடுத்து வரிசையாக படங்களை கைவசம் வைத்திருப்பதாலும், அட்லீ அல்லது நெல்சன் பக்கம் அல்லு அர்ஜூன் பார்வை திரும்பியிருக்கிறது.

இவர்கள் இருவரில் நெல்சன் கூறிய கதை அல்லு அர்ஜூனுக்கு பிடித்துவிட்டதாம். ஆனால் அதில் இன்னும் மெருகேற்ற வேண்டிய எழுத்து வேலைகள் இருப்பதாக நெல்சனுக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.
அதேநேரம், அட்லீ அல்லு அர்ஜூனை சந்தித்து இருந்தாலும் கதை எதுவும் சொல்லவில்லையாம். இனிதான் அட்லீ கதையைச் சொல்ல இருக்கிறார்.

இவர்கள் இருவரில் யார் அதிரிப்புதிரியான படம் கொடுப்பார், அதுவும் பான் – இந்திய படமாக கொடுப்பார் என்று அல்லு அர்ஜூன் குழப்பத்தில் இருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...