No menu items!

பிரபல இசையமைப்பாளர் வீட்டில் சொத்து பிரச்சினை!

பிரபல இசையமைப்பாளர் வீட்டில் சொத்து பிரச்சினை!

ரசிகர்களின் மன உளைச்சலையும், வேதனைகளையும், சோதனைகளையும் தனது இசையால் கடந்து வர செய்தவர் அந்த இசையமைப்பாளர். இவரது மெல்லிசைகளையும், மென்மையான மேற்கத்திய இசையாலும் வலிகளைக் கடந்தவர்கள் ஏராளம்.

ஆனால் அதே இசையமைப்பாளர் இன்று மன உளைச்சலாலும் பெரும் வேதனைக்கு உள்ளாகி இருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

அப்படி என்ன நடந்துவிட்டது என நீங்கள் பதறுவது புரிகிறது. நாமும் இதே பதட்டத்தோடு விசாரித்தால், குடும்பத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சொத்துப் பிரச்சினைதான் காரணம் என சொல்கிறார்கள்.

இசையமைப்பாளரின் மூத்த வாரிசுக்கும் இளைய வாரிசுக்கும் இடையில் பற்றியெரியும் சொத்துப் பிரச்சினை இப்போது மும்முரமாகி இருக்கிறதாம்.

இந்த சொத்துப் பிரச்சினை எழுவதற்கு முக்கிய காரணம் இசையமைப்பாளரின் மகள் உடல்நலம்தானாம்.

கோவிட் தொற்றுக்கு முன்பாக திடீரென ஏற்பட்ட வயிற்று வலியால், மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார் மகள். அங்கே அவரை மருத்துவர்கள் பரிசோதித்து இருக்கிறார்கள். முதலில் மருந்துகளைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த மருந்துகள் எதுவும் கைக்கொடுக்கவில்லை.

இதனால் இசையமைப்பாளரின் மகளிடம் சிடி ஸ்கேன் செய்ய சொல்லியிருக்கிறார்கள். ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி. இசையமைப்பாளரின் மகள் வயிற்றில் ஒரு சிறிய கட்டி ஒன்று இருந்திருக்கிறது. இந்தக்கட்டி பின்னாளில் பிரச்சினையாக மாற வாய்ப்பிருக்கிறது என்பதால், அதை அறுவைச்சிகிச்சை மூலம் அகற்ற பரிந்துரை செய்திருக்கிறது மருத்துவர் குழு.
ஆனால் வயிற்றில் இருக்கும் கட்டியால் பதட்டமடைந்த மகள், அதுபற்றி தனது அப்பாவிடமோ அல்லது குடும்பத்தாரிடமோ ஒன்றும் சொல்லாமல் மறைத்துவிட்டாராம்.

நாள் ஆக ஆக வயிற்று வலி பிரச்சினை கொடுப்பது அதிகமாகி இருக்கிறது. இதனால் சமீபத்தில் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார் மகள்.

இந்த முறை திவீர பரிசோதனை செய்த மருத்துவர் குழு, அவருக்கு இனி மருந்துகளால் தீர்க்க முடியாத பிரச்சினை இருப்பதாக கூறிவிட்டார்களாம்.

இந்த அதிர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாமல் இசையமைப்பாளர் உடைந்துப் போய்விட்டாராம். ஆனால் இதற்கு பிறகு நடந்த சம்பவங்கள் இசையமைப்பாளரை மன வருத்தத்தின் உச்சத்திற்கு கொண்டுப்போய் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

மகளுக்கு உடல் நலம் சரியாக இல்லாததால், சொத்துகளைப் பிரித்து கொடுக்கும் படி இரண்டு வாரிசுகளும் இசையமைப்பாளரிடம் கேட்டார்களாம். அதிலும் எப்பொழுதும் தன்னுடனேயே இருக்கும் மூத்த மகன் சொத்தைப் பிரித்து கொடுக்கும்படி கேட்டதை இசையமைப்பாளர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள்.

மூத்த மகன் சொத்து விஷயத்தில் கொஞ்சம் கெடுபிடியாக இருப்பது இசையமைப்பாளருக்கு பிடிக்கவில்லை என்பதை விட, தன்னுடைய இசை வாரிசாக நினைத்தவனா இப்படி கேட்பது என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு கூறியிருக்கிறார்.

தனது இசையால் கோடிக்கணக்கான இதயங்களை கட்டிப்போட்டிருக்கும் இசையமைப்பாளருக்கு அவரது வீட்டில் கிளம்பியிருக்கும் சொத்து பிரச்சினை நாளுக்கு நாள் பெரும் விவாதமாகிக் கொண்டே போவது நொந்துப் போக செய்திருக்கிறதாம். சொத்துப் பிரச்சினைக்கு ஒரு முடிவுக்கு வராத காரணத்தினால் இசையமைப்பாளர் இப்போது யாருடனும் சரிவர பேசுவதுகூட இல்லையாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...