No menu items!

விக்ரம் – கமலின் புதிய விளம்பர முயற்சி

விக்ரம் – கமலின் புதிய விளம்பர முயற்சி

‘விக்ரம்’ படத்தின் விளம்பரங்களை சமூக ஊடகங்களின் மூலம் பரபரப்பாக கொண்டு செல்ல வேண்டுமென கமல் மும்முரமாக இயங்கி வருகிறார்.

கமல், விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் என சூப்பர் நட்சத்திரங்கள் நடித்திருப்பதால், சமூக ஊடகங்களில் சுலபமாக விளம்பரம் கிடைத்துவிடும் என்பது கமல் திட்டம்.

கேஜிஎஃப்-2 படத்தின் பாணியில், ட்விட்டரில் விளம்பரங்களை தொடங்கலாம் கமலுக்கு யோசனை சொல்லப்பட்டிருக்கிறது. இதன்படி, விக்ரம் படத்திற்கென ப்ரத்யேகமாக ஹேஷ்ஃப்ளாக் [hashflag] உருவாக்கப்பட இருக்கிறது. படம் வெளியாகும் ஜூன் 3-ம் தேதி #Vikram, #VikramHitlist and #VikramInAction ஆகிய ஹேஷ்ஃப்ளாக்குகள், எமொஜிகளை ட்விட்டரை உபயோகிப்பவர்கள் பயன்படுத்த முடியும். இந்த ஹேஷ்ஃப்ளாக்குகள் ஜூன் -3-ம் தேதி மட்டுமே ட்விட்டரில் இருக்கும். அதன் பிறகு இவற்றை பயன்படுத்த முடியாது. இதற்கேற்ற வகையில், இந்த ஸ்டைல் விளம்பரத்திற்கான வேலைகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டது.

இந்த ட்ரெண்ட்டுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தால், இதே போன்ற விளம்பர பிரச்சாரத்தை கமல் பாணியில் தமிழ் நாயகர்கள் முன்னெடுப்பார்கள் என்பது நிச்சயம்.

சூர்யாவுடன் கைக்கோர்க்கும் சிறுத்தை சிவா?

சூர்யா தற்போது பாலா படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இப்பட ஷூட்டிங்கில் இவர்கள் இருவருக்கும் புரிதலில் மோதல் ஏற்பட்டதாக பரபரப்பானது. ஆனால் இவர்கள் இருவரும் இப்படத்தில் தொடர்ந்து பிஸியாக இருப்பதாக சூர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அடுத்து வெற்றி மாறனின் ’வாடிவாசல்’ படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்நிலையில், சூர்யா இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் கைக்கோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.

அஜீத்துடன் தொடர்ந்து படங்கள் இயக்கிய சிவா, அஜீத்திற்காக ஒரு பக்காவான கதையை தயார் செய்து வைத்திருக்கிறாராம். இந்தக் கதையில்தான் சூர்யா நடிக்கப் போவதாக கிசுகிசுக்கிறார்கள்.

ஆனால் சூர்யாவுக்காக சிறுத்தை சிவா தயார் செய்து வைத்திருக்கும் கதை, ஒரு ப்ரீயட் ஆக்‌ஷன் கதை என்கிறார்கள். மேலும் இக்கதைக்கான பின்புலம் மற்றும் கதாபாத்திரங்களின் உருவாக்கத்திற்கு அதிக காலம் எடுக்கும் என்பதாலும், கதையின் போக்கு இரண்டுப் படங்கள் எடுக்குமளவுக்கு நுணுக்கமான டீடெய்லிங் உடன் இருக்கும் என்பதாலும், இக்கதையை இரண்டு பாகங்களாக எடுக்கலாம் என இயக்குநர் தரப்பு கூறிவருவதாக பேசிக் கொள்கிறார்கள்.

இவையெல்லாம், சரியான முறையில் முடிவானால், இப்படத்திற்கான வேலைகள் ஜூலை 2022-ல் தொடங்கலாம் என்று கிசுகிசுக்கிறார்கள்.

கார்த்தியின் அடுத்த படம்

கார்த்தியின் சர்தார் மற்றும் விருமன் படங்கள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன.
அடுத்து கார்த்தி ராஜு முருகன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பிக்கிறது இந்த படத்தை ஒரே கால்ஷீட்யில் முடிக்க திடடமிட்டுள்ளனர். இந்த படத்துக்கு நாயகி இன்னும் முடிவாகவில்லை.

அதற்கடுத்து அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் கார்த்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...