No menu items!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை …

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை …

பாகிஸ்தானில் நடந்த அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை உடன்பாட்டை எட்டத் தவறிய நிலையில், “ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரும்புவது குறித்து எனக்குக் கவலையில்லை. ‘நாகரிகம் அழியும்’ என்ற எனது கருத்துதான் ஈரானைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்தது” என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறினார்.

புளோரிடாவிலிருந்து மேரிலாந்தில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ஈரான் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வருகிறார்களா இல்லையா என்பது குறித்து எனக்குக் கவலையில்லை. அவர்கள் திரும்ப வரவில்லை என்றாலும், எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

‘நாகரிகம் அழியும்’ என்ற எனது கருத்துதான் ஈரானைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்தது. ஆனால், அவர்கள் அதை மறந்து விட்டு பேச்சுவார்த்தையை விட்டு வெளியேறிவிட்டார்கள். இருப்பினும், அவர்கள் திரும்பி வந்து, நாம் விரும்பும் அனைத்தையும் நமக்குத் தருவார்கள் என்று நான் கணிக்கிறேன்” என்று கூறினார்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்கா, ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 21 மணி நேரம் நடந்த இப்பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைய அமெரிக்காதான் காரணம் என ஈரான் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.

அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மேற்காசியாவில் போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ‘ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் போர்க் கப்பல்கள் நுழைய முயற்சித்தால் மிகப்பெரிய தாக்குதல் நடத்துவோம்’ என்று ஈரான் இஸ்லாமிய புரட்சிப் படை தெரிவித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...