No menu items!

விஜய் 69-ல் ஹெச். வினோத்?

விஜய் 69-ல் ஹெச். வினோத்?

’விக்ரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு என்னுடைய அடுத்தப்படத்தை இயக்கப் போவது இவர்தான் என கமல் எங்கு சென்றாலும் தன்னுடனேயே அழைத்து சென்ற ஹெச். வினோத், இப்போது யாருடன் இணைந்து படம் பண்ணலாம் என யோசித்து கொண்டிருக்கிறார்.

’விஜய் 69’ படத்தில் விஜயுடன் இணைய போவது யார் என்ற குழப்பம் நிலவுகிறது. உண்மையில் விஜய் சன் பிக்சர்ஸூக்கு படம் பண்ண ஏற்கனவே முடிவாகி இருந்தது. அதனால் அவருடைய கால்ஷீட்டை சன் பிக்சர்ஸ் தன் வசம் வைத்திருப்பதால், அட்லீயை வைத்து எடுக்கலாமா என்று யோசித்து வருவதாக கூறினார்கள்.

இது ஒரு பக்கம் இருந்தாலும், விஜயின் கடைசிப் படத்தை இயக்கப் போவது, ஹெச். வினோத் என்றும் ஒரு தகவல். டிவிவி எண்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் சொல்கிறார்கள்..

விஜயின் கடைசிப் படம் என்பதால் இதற்கு எதிர்பார்பு அதிகமிருக்கும். எப்படியும் பெரும் வியாபாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து கட்சியை நடத்துவதற்கும் நிதி தேவை என்பதால் விஜய் பெரும் தொகையை சம்பளமாக எதிர்பார்க்கிறாராம். அதாவது 250 கோடி சம்பளம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என விஜய் தரப்பில் கூறப்பட்டிருக்கிறதாம்.

250 கோடியைக் கொடுக்க டிவிவி எண்டர்டெயின்மெண்ட் தயாராக இருக்கிறதாம். ஆக சம்பளம் பஞ்சாயத்து யார் வசம் முடிகிறதோ அவர்களுக்கு விஜய் தனது கடைசிப்பட கால்ஷீட்டை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


நிர்வாணமாக நடிக்க வோட்கா குடித்த ப்ரித்விராஜ்

கமல், விக்ரம் எல்லோரையும் விட ப்ரித்வி ராஜ் ஒரு படி மேலே போயிருக்கிறார். ’ஆடு ஜீவிதம்’ படத்தில் ப்ரித்விராஜின் நடிப்பைப் பாராட்டாவர்கள் யாருமில்லை என்று சொல்லுமளவிற்கு அவருக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.

அந்தப் படத்தில் ப்ரித்விராஜ் நிர்வாணமாக நடிக்கும் காட்சி ஒன்றும் இடம்பெற்று இருக்கிறது. இதில் நடிக்க ப்ரித்விராஜ் எவ்வளவு மெனக்கெட்டார் என்பதை இப்போதுதான் அப்பட ஒளிப்பதிவாளர் சுனில் கே.எஸ். வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

‘அந்த நிர்வாண காட்சிக்காக, ப்ரித்விராஜ் மூன்று நாட்களாக ஒன்றுமே சாப்பிடவில்லை. ஷூட்டிங்கிற்கு முந்தைய நாள் கூட அவர் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கவில்லை.

ஷூட்டிங் அன்றைக்கு அவர் ஒரு 30 மில்லி லிட்டர் வோட்கா குடித்தார். வோட்காவினால் அவர் உடம்பில் இருக்கும் மிச்சம் மீதி தண்ணீரையும் இல்லாமல் செய்துவிட்டார்.

அதன் பிறகு, அவரை ஒரு நாற்காலியில் வைத்துதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து சென்றோம். ஷாட் வைத்ததும் அவரை நாற்காலியில் இருந்து தூக்கிக்கொண்டுவந்து வைத்தோம். அந்தளவிற்கு அவர் தளர்ந்து போய் இருந்தார். இதெல்லாம் அந்த ஒரு காட்சியை எடுப்பதற்காகதான்’’ என்று கூறியிருக்கிறார்.


அடுத்து அட்லீ – அல்லு

’ஜவான்’ பட வெற்றிக்குப் பிறகு அடுத்தப்பட வேலைகளில் இறங்கிய அட்லீ செய்த முதல் காரியம் சம்பளத்தை ஏற்றியதுதான்.

அட்லீயுடன் இணைந்து படம் எடுப்பதில் ரொம்பவே குறியாக இருப்பவர் அல்லு அர்ஜூன். இருவரும் சந்தித்த போது, அட்லீ ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். அந்த கதை அல்லுவுக்கு பிடித்து போனது. இதனால் அடுத்து அட்லீதான் என்று அல்லு முடிவெடுத்துவிட்டார்.

எல்லா விஷயமும் முடிவாக, அட்லீயின் சம்பள விஷயம் மட்டும் இழுத்து கொண்டே போனது. அட்லீ 60 கோடி சம்பளம் கேட்டாராம். இல்லையென்றால் லாபத்தில் பங்கு வேண்டும் என்றாராம். இதனால் அல்லு அர்ஜூனின் அப்பா அல்லு அரவிந்த் தயக்கம் காட்டியிருக்கிறார்.

இந்த பிரச்சினை இழுத்துக்கொண்டே போகவே, பொறுமையிழந்த அட்லீ நேராக சன் பிக்சர்ஸூடன் பேசியிருக்கிறார். உடனே எல்லாம் முடிவாகிவிட்டதாம். அல்லு அர்ஜுனின் தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் இணை தயாரிப்பு நிறுவனமாக இருக்கும்.

அதாவது அட்லீ – அல்லு அர்ஜூன் இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறதாம். இது குறித்த அறிவிப்பு வருகிற எட்டாம் தேதி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இசை அனிருத் ரவிச்சந்திரன்தான் என அட்லீ கறாராக இருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...