No menu items!

உதயநிதி தலை – யார் இந்த பரமஹன்ஸ் ஆச்சார்யா?

உதயநிதி தலை – யார் இந்த பரமஹன்ஸ் ஆச்சார்யா?

உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து சொல்லிய கருத்திற்கு, பிறகு செய்திகளில் அதிகம் அடிப்படும் பெயராகி இருக்கிறது பரமஹன்ஸ் ஆச்சார்யா என்ற சாமியாரின் பெயர்.

யார் இந்த பரமஹன்ஸ ஆச்சார்யா?  அவரது பின்னணி என்ன என்று பார்ப்போம்…   

அயோத்தியில் இருக்கும் தபஸ்வி சாவ்னியைச் சேர்ந்தவர்தான் இந்த பரமஹன்ஸ ஆச்சார்யா.

2021-ம் ஆண்டிலிருந்தே இவரது பெயர் செய்திகளில் அதிகம் அடிப்பட ஆரம்பித்திருக்கிறது.

இந்தியாவை ’இந்து ராஷ்டிரம்’ என்று அறிவிக்கப்படாவிட்டால், சராயு நதியில் ஜல சமாதி அடைவேன் என்று அதிரடியாக அறிவித்தவர் இந்த பரமஹன்ஸ் ஆச்சார்யா. இதனால் அவரை உத்திரப்பிரதேச மாநில அரசு வீட்டுக்காவலில் வைத்தது. இதையடுத்து அவர் தனது முடிவை கைவிட்டுவிட்டார்.

உண்டு இல்லை என்று பண்ணிவிடுவேன் என இந்த பரமஹன்ஸ் ஆச்சார்யா சொல்வது இது முதல் முறையல்ல. இந்தாண்டு தொடக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான ‘பதான்’ படத்தில் இடம்பெற்ற ‘பேஷ்ரம் ரங்’ பாடல் மீதான சர்ச்சை கிளம்பிய போது, ஷாரூக்கானுக்கும் இவர் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

முன்பு இவர் ஒரு பேட்டியில், ‘இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த மக்கள் ஒருவர் கூட இருக்கக்கூடாது. அவர்கள் இல்லாத இந்தியாவாக இருக்கவேண்டும்’ என்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

வட இந்தியாவில் இந்த பரமஹன்ஸ ஆச்சார்யா சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்றவர் என்றாலும் உதயநிதி ஸ்டாலின் மீதான இந்த சர்ச்சையின் மூலம் தமிழ் நாட்டிலும் இப்போது செய்திகளில் அடிப்பட ஆரம்பித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...