No menu items!

ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து நீக்கம்

ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து நீக்கம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் சக்தி நகரில் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். மேலும் விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு திமுக கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். பக்கிரிசாமி தனது பள்ளியில் படித்து வரும் 6-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து பக்கிரிசாமியை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட பக்கிரிசாமி திமுகவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டு உள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பக்கிரிசாமி செயல்பட்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக துரை முருகன் தெரிவித்துள்ளார்.

இபிஎஸ்ஸை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிப்பது பற்றி 10 நாள்களில் முடிவு: தேர்தல் ஆணையம் பதில்

அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு, நீதிபதி புருசந்திரா குமார் கவ்ரவ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் அதற்கான பணிகளை மேற்கொள்ளும் வகையில், அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் உடனடியாக அங்கீகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஆவணங்களை சரிபார்த்து முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்த தேர்தல் ஆணையம், 10 நாட்கள் அவகாசம் வழங்க கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்று, தேர்தல் ஆணையத்திற்கு அவகாசம் வழங்கிய நீதிமன்றம், வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: ஒருநாள் பாதிப்பு 7,500ஐ கடந்தது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 5 ஆயிரத்து 676 ஆக இருந்த நிலையில் இன்று பாதிப்பு 7,830- ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 40,215- ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,47,76,002 ஆக உயர்ந்துள்ளது.

பொது இடத்தில் கணவர் அபிஷேக்பச்சன் மீது கோபப்பட்ட ஐஸ்வர்யா ராய்: வைரலான வீடியோ

நடிகை ஐஸ்வர்யா ராய், புரோ கபடி லீக் போட்டி ஒன்றில் தனது கணவர் அபிஷேக் பச்சனின் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி விளையாடும் போட்டியைக் காண வந்திருந்தார். அவருடன் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யா மற்றும் அபிஷேக்கின் சகோதரியின் மகள் நவ்யா நந்தா உடனிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஐஸ்வர்யா ராயிடம் அபிஷேக் பச்சன் ஏதோ கூற அதற்கு ஐஸ்வர்யா கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக கண்களை உருட்டி பார்க்கிறார். மேலும் அவர் உறவினர் மீதும் கோபப்பட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...