No menu items!

ஷ்ருதி ஹாசன் – ஜாக்கெட் ப்ளீஸ்!

ஷ்ருதி ஹாசன் – ஜாக்கெட் ப்ளீஸ்!

எந்த விஷயமாக இருந்தாலும் மனதில் பட்டதை பட்டென்று சொல்வதில் தனது அப்பா கமல் ஹாசனைப் போலவே இருக்கிறார் ஷ்ருதி ஹாசன்.

லிவ்விங் டுகெதர் விஷயத்திலும் கூட, ஷ்ருதி ஹாசன் ரொம்பவே அலட்டிக் கொள்வது இல்லை. தடாலடியாக தனது ஆண் நண்பர் சாந்தனு ஹசாரிகாவுடன் இருக்கும் வீடியோ எடுத்து, சமூக ஊடகங்களில் அப்லோட் செய்து அதிர வைக்கிறார்.

இப்படிப்பட்டவரை சினிமா பாடலுக்காக, ஏதாவது ஒரு பனி மலை உச்சியில், உறைய வைக்கும் மைனஸ் டிகிரியில், வெறும் ப்ளவுசையும், இரண்டு அல்லது மூன்று அடி நீளத்தில் இருக்கும் துண்டைச் உடம்பில் சுற்றிக்கொண்டு ஆடச் சொன்னால் என்ன செய்வார் யோசித்து பாருங்கள்.

ஆமாம் ரொம்பவே பொங்கிவிட்டார் ஷ்ருதி ஹாசன்.

‘ஒரு பாட்டுல ஏதாவது ஒரு பனி மலையில் ஆடுற மாதிரி ஷூட் பண்றாங்க. ஹீரோ மட்டும் குளிருக்கு இதமா ஸ்டைலா ஜாக்கெட் போட்டுக்குவாங்க. ஆனா ஹீரோயின்களுக்கு மட்டும் ஜாக்கெட் இருக்காது. ஒரு கோட் இருக்காது. அவ்வளவு ஏன் ஒரு ஷால் கூட கொடுக்க மாட்டாங்க. ஒரு புடவை, ப்ளவுஸ் மட்டும்தான். அந்தப் பனியில., அடிக்கிற குளிருல ஆடச் சொல்றது சரியா….டைரக்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். இதை முதல்ல நிறுத்துங்க’ என்று வெளிப்படையாக பொரிந்து தள்ளியிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான ‘வால்டர் வீரய்யா’ படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஷ்ருதி ஹாசன் நடித்திருந்தார். அந்தப்பட பாடல் ஒன்றில் சிரஞ்சீவி ஜாக்கெட் எல்லாம் அணிந்து இருப்பார். ஆனால் ஷ்ருதி ஹாசனுக்கு வெறும் புடவை ப்ளவுஸ் ,மட்டும்தான்.

அந்த படம்தான் ஷ்ருதி ஹாசனை இப்படி பொங்க வைத்திருக்கும் போல. இனியாவது ஹீரோயின்களுக்கும் ஜாக்கெட் ப்ளீஸ்!

#shrutihaasan, #cinemalove, #glamour, #shrutiboyfriend, #tamilcinema,


வெற்றிமாறனிடம் கதை கேட்ட பு’ஷ்பா’ அல்லு அர்ஜூன்!

’விடுதலை’ படத்திற்கு பிறகு வெற்றிமாறனுக்கு தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் ஏகப்பட்ட வரவேற்பு.

கொஞ்ச நாட்களுக்கு முன்பாக, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ பட புகழ் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கிறார் என்று ஒரு தகவல் பரவியது. ஆனால் பிறகு அதை ஜூனியர் என்.டி.ஆர். தரப்பிலிருந்து ‘அப்படி எல்லாம் இல்லை’ என்று விளக்கம் சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது வெற்றிமாறனே தனது தெலுங்கு சினிமா எண்ட்ரீ குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

’’தமிழில் ‘ஆடுகளம்’ படம் வெளியானது. அந்த நேரத்தில் சென்னையில் அல்லு அர்ஜூனை நான் சந்தித்தேன். அப்போது அல்லு அர்ஜூன், ‘நான் தமிழ் சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறேன்’. நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள்’’ என்றார்

சில நாட்களுக்குப் பிறகு அல்லு அர்ஜூனிடம் நான் ‘வட சென்னை’ கதையைச் சொன்னேன்.. அதில் அல்லு அர்ஜூனுக்கு ரொம்ப பவர்ஃபுல்லான ரோல் ஆனால் அந்த நேரத்தில் அது செட்டாகாமல் போயிவிட்டது. பிறகு அதை மீண்டும் மாற்றி எழுதினேன். படமாக வெளிவந்த ‘வட சென்னை’ கதை வேறு. அல்லு அர்ஜூனுக்கு நான் சொன்ன கதை வேறு.
நான் ஜூனியர் என்.டி.ஆர்-ஐ சந்தித்ததாக ஊடகங்களில் ஒரு தகவல் வெளியானது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் ஜூனியர் என்.டி.ஆர்-ஐ மட்டும் சந்திக்கவில்லை. அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு இவர்கள் இருவரையும் சந்தித்தேன்.

எனக்கும் தெலுங்குப் படம் பண்ண வேண்டுமென்று ஆசை இருக்கிறது. ஆனால் அது எப்போது எப்படி நடக்கும் என்பது தெரியவில்லை’’ என்று கூற, இப்பொழுது வெற்றிமாறனை வைத்து ஒரு பான் – இந்தியா படமெடுக்க வேண்டுமென தெலுங்கு ஹீரோக்கள் வட்டமிட்டப்படி இருக்கிறார்கள்.

#vetrimaaran, #viduthalai, #pushpa, #alluarjun, #juniorntr, #maheshbabu, #aadukalam,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...