No menu items!

தெலுங்கு சினிமாவை குறி வைக்கும் நெட்ஃப்ளிக்ஸ்!

தெலுங்கு சினிமாவை குறி வைக்கும் நெட்ஃப்ளிக்ஸ்!

இந்தியச் சந்தையில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த ஒடிடி நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டியில் அமேசானும், நெட்ஃப்ளிக்ஸூம் முன்னணியில் இருக்கின்றன.

இந்தப் போட்டியில் தென்னிந்திய மொழி படங்களின் ஒடிடி உரிமையை வாங்குவதில் ஜீ5, ஹாட்ஸ்டார் காட்டும் அக்கறை இந்த இரு நிறுவனங்களும் காட்டுவதில்லை. இதனால் நெட்ஃப்ளிக்ஸ் எதிர்பார்த்த மார்க்கெட்டை பிடிக்கமுடியவில்லை.

இதை மிகவும் தாமதமாக புரிந்து கொண்டிருக்கும் நெட்ஃப்ளிக்ஸ் இப்போது தென்னிந்தியப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இறங்கி வந்திருக்கிறது.

இந்த யுக்தியின் முதல்கட்டமாக தென்னிந்திய சினிமாவில் சொல்லும்படியான வியாபாரம் இருக்கும், ரசிகர்கள் இருக்கும் தெலுங்கு சினிமாவை குறிவைத்திருக்கிறது நெட்ஃப்ளிகஸ். இதன் தொடர்ச்சியாக, 2024-ம் ஆண்டில் தனது ஒடிடி தளத்தில் ஸ்ட்ரிமிங் செய்ய, இப்பொழுதே இரட்டை இலக்க படங்களின் ஒடிடி உரிமைகளை வாங்கி வைத்திருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ்.

2024- ஆண்டுக்கான நெட்ஃப்ளிக்ஸின் சிலேட்டில் 11 படங்கள் இடம்பிடித்திருக்கின்றன. இந்தப் பன்னிரெண்டு படங்களும் முதலில் திரையரங்குகளில்தான் வெளியாக இருக்கின்றன. திரையரங்கு ஓட்டத்திற்குப் பிறகு இந்தப்படங்கள் நெட்ஃப்ளிக்ஸின் ஒடிடி தளத்தில் ஸ்ட்ரிமிங் செய்யப்பட இருக்கின்றன,

அந்தப்படங்களின் பட்டியல் இதோ

  1. தேவரா – முதல் பாகம்
  2. புஷ்பா 2- த ரூல்
  3. சலார் – முதல் பாகம் சீஸ்ஃபயர்
  4. என்பிகே 109
  5. தில்லு ஸ்கொயர்
  6. கேங்ஸ் ஆஃப் கோதாவரி
  7. பட்ட்டி
  8. விஜய் தேவரகொண்டாவின் 12-வது படம் (VD 12)
  9. கார்த்திகேயாவின் அடுத்தப்படம் (Karthikeya 8)
  10. நர்னே நிதின் படம் (GA 2 Pictures)
  11. சித்து ஜோன்லகடா படம் (SVCC 37)

இப்படி 11 படங்களின் ஒடிடி உரிமையை வாங்கிக்கொண்டு பந்தயத்தில் முந்திக்கொண்டிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ்.

நெட்ஃப்ளிக்ஸ் இப்படி தெலுங்குப் படங்களின் மீது அக்கறை காட்டுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்நிறுவனத்தின் ஆண்டு வளர்ச்சியில் 50% தெலுங்குப் படங்களைச் சார்ந்துதான் இருக்கிறது. இதனால்தான் நெட்ஃப்ளிக்ஸ், தமிழ் மற்றும் மலையாளப்படங்களை விட தெலுங்குப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறது.

காதலில் விழுந்தாரா சந்திரமுகி நாயகி?

கங்கனா ரனவத், ஒரு அதிரடி நடிகை. மனதில் பட்டத்தை பட்டென்று சொல்வார். பின்னால் வருவதைப் பற்றி கவலைப்பட மாட்டார். இதனால் இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது வழக்கம்.

இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இந்த முறை காதல் சர்ச்சை. சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டார் கங்கனா ரனவத். அப்போது அவர் தனியாக வரவில்லை. வழக்கத்திற்கு மாறாக கங்கனாவுடன் ஒரு வாட்டச்சாட்டமான வாலிபர் ஒருவரும் கூடவே வந்தார்.

அந்த வாலிபரின் கையை இறுகப்பற்றிகொண்டு கங்கனா வரவே பரபரப்பு பற்றிக்கொண்டது.

யார் அந்த இளைஞர், அவருடைய பின்னணி என்ன? கங்கனா அவரை காதலிக்கிறாரா என ஏகப்பட்ட கேள்விகளை சமூக ஊடங்கங்களில் முன்வைக்க, வேறு வழியில்லாமல் கங்கனா பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

காதல், டேட்டிங் என கிசுகிசு கிளம்பவே பொறுமையிழந்த கங்கனா, ‘
என்னால முடியல. எக்கச்சக்கமான போன் கால்கள். யார் அவரு யார் அவருன்னு கேட்டு கேட்டு நோகடிச்சிட்டாங்க. இன்னும் சில பேர் கற்பனை கதையை சொல்ல தொடங்கிட்டாங்க. சில காமக்கதைகளையும் உருவாக்கிட்டாங்க. ஒரு ஆம்பளையும், ஒரு பொம்பளையும் தெருவுல ஒன்றாக நடந்து போனா, அதுக்கு செக்ஸ்தான் காரணமா இருக்குமா? அவங்க ரெண்டுப்பேரும் ஒன்றாக வேலைப்பார்க்கலாம். இல்ல சகோதர சகோதரியா கூட இருக்கலாம். இப்போ சொல்றேன் அவர் என்னோட ஹேர்ஸ்டைலிஸ்ட். சத்தியமா என்னோட பாய் ஃப்ரெண்ட் இல்ல.’’ என்று வெளுத்து வாங்கியிருக்கிறார் கங்கனா ரனவத்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...