No menu items!

ட்ரோலுக்கு உள்ளான அமலா பால்!

ட்ரோலுக்கு உள்ளான அமலா பால்!

இயக்குநர் ஏ.எல். விஜயுடன் உண்டான காதலால், அவரை ஆர்வத்தோடு திருமணம் செய்து கொண்டார் அமலா பால். ஆனால் அந்த காதல் திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. இருவருக்கும் இடையே பல கிசுகிசுக்களால் மன முறிவு ஏற்பட்டது. அது திருமண முறிவுவரை கொண்டு போய்விட்டது.

விவாகரத்திற்குப் பிறகு ஒரு ஜிப்ஸியை போல, ஊர் ஊராக ரவுண்ட் அடித்தார் அமலா பால். சொல்லி வைத்ததுப் போல அவருக்கு சினிமா வாய்ப்புகளும் அதிகம் வரவில்லை.

இந்நிலையில்தான் யோகா, தியானம் என்று மாறிய அமலா பாலுக்கும் அவரது நெருங்கிய ஆண் நண்பர் பவ்வீந்தருக்கும் இடையே காதல் என்ற ஒரு பேச்சு எழுந்தது ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட தாக அவரது ஆண் நண்பர் சில புகைப்படங்களை வெளியிட்டார்.

இதனால் பிரச்சினை வெடிக்க இருவரது தரப்பிலும் இருந்து காவல்துறை, நீதிமன்றம் என புகார்கள் நீண்டது. ஆனால் பெரிய இடத்து ஆதரவு இருந்த தால் அந்த பிரச்சினை வெளியே தெரியாமல் அப்படியே அடங்கிப் போனது.

இந்நிலையில்தான் அமலா பாலுக்கும் அவரது மற்றொரு ஆண் நண்பரான ஜகத் தேசாய்க்கு நெருக்கம் ஏற்பட்டது. இந்த ஜகத் தேசாய் தனது காதலை ஒரு ஆங்கிலப் பட காட்சியைப் போல் ஸ்டைலாக சொல்ல, அதை அமலா பால் ஏற்றுக்கொண்டதாக வீடியோக்கள் வெளியாகின.

சில நாட்களிலேயே கடந்த நவம்பர் மாதம் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

ஆனால் இந்த ஜனவரியில் அமலா பால் தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு புகைப்படத்தை வெளியிட, அதிர்ச்சிக்குள்ளானார்கள் நெட்டிசன்கள். கர்ப்பமான அமலா பாலின் வயிற்றை ஜகத் தேசாய் பிடித்து கொண்டிருப்பது போன்ற புகைப்பட த்துடன் 1+1 இப்போது 3 ஆகிடுச்சு. என்று வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ட்ரோல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

அமலா பாலுக்கு வாழ்த்துகளைச் சொன்ன அதே வேகத்தில் இப்போதானே கல்யாணம் ஆனது. கல்யாணமான ஒரு மாசத்துக்குள்ளே எப்படி இப்படி? நீங்க ரொம்ப வேகம்தான் போல’ என்று ட்ரோல் செய்ய அரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால் அமலா பால் இதையெல்லாம் கண்டுக்கொண்டதாக தெரியவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...