No menu items!

யோகா – வயது 5000

யோகா – வயது 5000

சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு 21-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா தலைமைய கத்தில் நடைபெறும் சர்வதேச யோகா கொண்டாட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இச்சூழலில் யோகாசனத்தைப் பற்றி சில சுவையான தகவல்களை தெரிந்துகொள்வோம்…

யோகாசனம் இந்தியாவில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய உடற்பயிற்சி முறை. கி.மு.1500-ல் எழுதப்பட்ட ரிக் வேதத்தில் யோகாசனத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

1890-ம் ஆண்டில் மேற்கத்திய நாடுகளில் யோகாசனம் அறிமுகம் ஆனது. மேற்கத்திய நாடுகளில் யோகாவைப் பரப்பியதில் சுவாமி விவேகானந்தருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. 1893-ம் ஆண்டில் சிகாகோவில் நடந்த சமய மாநாட்டில் விவேகானந்தர் பேசிய பிறகு, அங்குள்ளவர்களுக்கு யோகாசனம் மீது மிகப்பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது.

யோகா பாயிற்சி மேற்கொள்ளும் ஆண்கள் யோகி என்றும், பெண்கள் யோகினி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றைக் குறைப்பதில் யோகாசனம் முக்கிய பங்கு வகிக்கிறது.

யோகாசனத்தை முறையாக பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் முன் செய்ய வேண்டும். தவறான முறையில் யோகாசனம் செய்தால் உடலில் காயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

கன்ணாடி முன்பு யோகாசனத்தை செய்யக்கூடாது என்று கூறப்படுகிறது.

யோகாசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு, சர்க்கரை, ரத்தக் கொதிப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் இதய நோய் வராமல் தடுக்கலாம்.

உலகளாவிய அளவில் 30 கோடிக்கும் மேற்பட்டோர் யோகாசனங்களைச் செய்து வருகிறார்கள்.

8.7 சதவீதம் அமெரிக்கர்கள் யோகா பாயிற்சி செய்கிறார்கள்.

30 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள் மத்தியில் யோகாசனம் மிகப் பிரபலமாக உள்ளது.

யோகாசனத்தை தீவிரமாகச் செய்தால் 3 மாதாங்களில் 3.5 கிலோ வரை எடையைக் குறைக்கலாம்.

சர்வதேச அளவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோகாசனப் பயிற்சி மையங்கள் உள்ளன.

ஆண்களை விட பெண்களே அதிக அளவில் யோகாசனத்தில் ஈடுபடுகிறார்கள். யோகாசனம் செய்பவர்களில் சுமார் 72 சதவீதம் பேர் பெண்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமிய கலாச்சாரத்துக்கு எதிரானது என்ற கருத்தால் மலேசியாவில் யோகாசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் சுமார் அரை மணிநேரம் யோகாசனம் செய்த பிறகு, 5 நிமிடங்களாவது ஓய்வெடுப்பது அவசியம்.

நம் உடலில் உள்ள 8 சக்தி மையங்களுக்கு யோகாசனம் புத்துணர்ச்சி அளிக்கிறது.

பாரம்பரிய முறையில் 84 வகையான யோகாசனங்கள் உள்ளன.

2018-ம் ஆண்டில் டெல்லியில் நரேந்திர மோடியின் தலைமையில் நடந்த யோகா வகுப்புதான் மிகப்பெரிய யோகா வகுப்பாகும். சர்வதேச யோகா தினத்தை ஒட்டி நடந்த இந்த யோகா வகுப்பில் 35,985 பேர் பங்கேற்றனர். இந்த யோகா வகுப்பு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

உலகின் வயதான யோகாசன ஆசிரியர் என்ற கின்னஸ் சாதனையை கனடா நாட்டைச் சேர்ந்த இடா ஹெர்பர்ட் படைத்துள்ளார். 95 ஆண்டுகள் 270 நாட்களில் யோகா வகுப்பு எடுத்து அவர் இந்த சாதனையைச் செய்தார்.

மிக நீண்ட நேரம் யோகா செய்தவர் என்ற கின்னஸ் சாதனையைச் செய்தவர் கனடா நாட்டின் யாஸ்மின் ஃபுகாடோவ்ஸ்கா காவ். இவர் தொடர்ந்து 32 மணி நேரங்களில் 1,008 வகையான யோகாசன்ங்களைச் செய்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...