No menu items!

சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி!

சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி நடிக்கும் படங்கள் என்றால் மக்களிடையே ஒரு எதிர்பார்பு இருந்தது ஒரு காலம். ஆனால் அந்த நம்பிக்கை அதல பாதாளத்திற்குள் போய் கொண்டு இருக்கிறது.

காரணம் விஜய் சேதுபதி சமீப காலமாக கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கும் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் கலவரமாகிக் கொண்டிருப்பதுதான்.

விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து அடுத்தடுத்து வெளிவந்த படங்கள் கதை, திரைக்கதை அம்சங்களிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. தனக்கேற்ற வகையிலும், வித்தியாசமான கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது சம்பள விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவதால் வந்த பிரச்சினைதான் அவரது படங்கள் எடுப்படாமல் போனதற்கு காரணம் என்கிறார்கள்.

மறுபக்கம் அவர் கமர்ஷியல் ஹீரோக்களுடன் வில்லனாக நடித்தப் படங்கள் வசூலில் கல்லா கட்டி கொண்டிருக்கின்றன். இதனால், அதைக் காரணம் காட்டி தனது சம்பளத்தை உயர்த்தி விட்டாராம்.

தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் சம்பளம் விஷயத்தில் உறுதியாக இருக்கும் இவர் தற்போது 16 கோடி சம்பளம் கேட்பதாக கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் அடுத்த பதில் என்ன சொல்வதென தெரியாமல் சைலண்டாக கழன்று கொள்கிறார்களாம்.

விசாகப்பட்டினத்தில் ‘வாரிசு’ விஜய்!

தெலுங்கு சினிமா இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் ஹைதராபாத் ஷெட்யூல் தற்போதைக்கு நிறைவுப் பெற்றிருக்கிறதாம்.
அடுத்த ஷெட்யூலை விசாகப்பட்டினத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறது ‘வாரிசு’ படக்குழுவினர்.

இதனால் விசாகப்பட்டினத்திற்குப் பறந்திருக்கிறார் விஜய். விசாகப்பட்டினம் செல்ல விமான நிலையத்தில் முகக்கவசம் அணிந்தபடி விஜய் நிற்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஷூட்டிங் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. இப்படத்தில் சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஸ்ரீகாந்த் என ஏராளமான நட்சத்திரப் பட்டாளம் இருப்பதால், ஷூட்டிங் ஸ்பாட்டே கலகலப்பாக இருக்கிறதாம்.

ராஷ்மிக மந்தனா ஸ்பாட்டில் பண்ணும் சேட்டைகள் ’வாரிசு’ ஷூட்டிங் ஸ்பாட்டை செம உற்சாகமாக வைத்திருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் ’மாவீரன்’ படத்தை ‘மண்டேலா’ பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் வெகுவிரையில் தொடங்க இருக்கிறது.

தமிழில் தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்திருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது தனது மார்க்கெட்டை தெலுங்கு சினிமாவிலும் விரிவுப்படுத்த விரும்புகிறாராம். இதனால்தான் மகேஷ் பாபுவின் செல்லப்பெயரான ‘பிரின்ஸ்’-ஐ தனது படப்பெயராகவும் தேர்ந்தெடுத்து இருக்கிறாராம்.

தெலுங்கிலும் தனது படம் எடுப்பட வேண்டுமென்பதால், அங்கு பிரபலமாக உள்ள குணசித்திர நட்சத்திரங்களை தனது படத்தில் கமிட் செய்யவும் வேண்டுகோள் விடுக்கிறாராம்.

இந்நிலையில், ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு இணையான கதாபாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். சிவகார்த்திகேயனுடன் மிஷ்கினுக்கு இருக்கும் காட்சிகள் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தி இருக்கிறார்களாம். இதனால் கமர்ஷியல் கலாட்டாக்களை அதிகரித்து பரபரப்பான படமாக்க திட்டமிட்டு வருகிறதாம் இயக்குநர் தரப்பு.

சிவகார்த்திகேயனுடன் மல்லுக்கட்டும் மிஷ்கின்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...