No menu items!

மீண்டும் வைரலாகும் தினேஷ் கார்த்திக் – தீபிகா பல்லிக்கல் காதல் கதை: என்ன காரணம்?

மீண்டும் வைரலாகும் தினேஷ் கார்த்திக் – தீபிகா பல்லிக்கல் காதல் கதை: என்ன காரணம்?

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் – ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் காதல் கதை பழையது. ஆனால், மீண்டும் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. என்ன காரணம்?

முதலில் இணையத்தில் வைரலாகும் தினேஷ் கார்த்திக் கதை…

‘2007… கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது பால்ய கால தோழியான நிகிதா வஞ்சாராவை திருமணம் செய்தார். தினேஷும் நிகிதாவும் தங்கள் திருமண வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். சந்தோஷமாக சென்ற திருமண வாழ்க்கையை சிதைக்க நெருங்கிய நண்பனே வில்லனாக வருவார் என்று தினேஷ் கார்த்திக் எதிர்பார்க்கவில்லை.

அப்போது ரஞ்சி கோப்பையில் தமிழக அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாகவும் இருந்தார். தமிழ்நாடு அணியில் இருந்த அவரது நெருங்கிய நண்பர், பின்னர் இந்திய அணியில் இடம்பிடித்த முரளி விஜய்.

ஒரு நாள் நிகிதா, தினேஷ் கார்த்திக்கின் அணியினரான முரளிவிஜய்யை சந்தித்தார். நிகிதா, முரளி விஜயை கவர்ந்தார். நிகிதாவுக்கும் முரளிக்கும் நெருக்கம் அதிகமாகி விரைவிலேயே அவர்கள் உறவுகொள்ள ஆரம்பித்தனர். அவர்கள் வெளிப்படையாகச் சந்திக்கத் தொடங்கினர். அப்பாவி தினேஷ் கார்த்திக் இதை உணரவில்லை. தினேஷின் மனைவி நிகிதாவுடன் முரளி விஜய் தொடர்பு வைத்திருப்பது தினேஷ் கார்த்திக் தவிர, ஒட்டுமொத்த தமிழக அணிக்கும் தெரிந்திருந்ததுதான் இதில் சோகம்.

2012ஆம் ஆண்டு நிகிதா கர்ப்பமானார். ஆனால், அந்த குழந்தை முரளி விஜய்யின் குழந்தை என்று அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தினேஷ் கார்த்திக் உடைந்து போனார். நிகிதாவை விவாகரத்து செய்தார். விவாகரத்துக்கு அடுத்த நாளே முரளி விஜய் – நிகிதா திருமணம் செய்து கொண்டனர். 3 மாதங்களுக்குப் பிறகு, நிகிதா அவர்களின் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

மனைவி, நெருங்கிய நண்பனின் துரோகத்தால் தினேஷ் கார்த்திக் மன உளைச்சலுக்கு ஆளானார். அவருக்கு மனநலப் பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பித்தன. தன் மனைவியும் நண்பன் முரளியும் செய்த துரோகத்தை அவரால் எளிதில் மறக்க முடியவில்லை. காலை முதல் இரவு வரை குடித்துவிட்டு மதுவுக்கு அடிமையானார். இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். தமிழக அணியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. முரளி விஜய் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அத்துடன் நிற்கவில்லை; ஐபிஎல்லில் கூட தினேஷ் கார்த்திக் சரியாக விளையாடவில்லை. ஜிம்மிற்கு செல்வதை நிறுத்திவிட்டார். கடைசியில் நம்பிக்கை இழந்த தினேஷ் தற்கொலை பற்றி பேச ஆரம்பித்தார்.

இந்நிலையில் ஒரு நாள், ஜிம்மில் இருந்து அவரது பயிற்சியாளர் அவரது வீட்டிற்கு வந்தார். அப்போது தினேஷ் கார்த்திக்கை மிக மோசமான நிலையில் இருந்தார். தினேஷை நேராக ஜிம்மிற்கு அழைத்துச் சென்றார் பயிற்சியாளர்.

அதே ஜிம்முக்கு இந்திய ஸ்குவாஷ் சாம்பியன் தீபிகா பல்லிகல்லும் வந்துகொண்டு இருந்தார். தினேஷ் கார்த்திக்கின் நிலையைப் பார்த்ததும், அவரும் பயிற்சியாளருடன் சேர்ந்து அவருக்கு ஆலோசனை வழங்க ஆரம்பித்தார்.

பயிற்சியாளர் மற்றும் தீபிகாவின் கடின உழைப்புக்கு விரைவிலேயே பலன்கள் கிடைத்தது. தினேஷ் கார்த்திக் முன்னேற்றப் பாதைக்கு திரும்பினார்.

இதற்கிடையில் முரளி விஜயின் ஆட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது. இந்திய அணியில் இருந்து முரளி விஜய் வெளியேற்றப்பட்டார். பின்னர் அவரது மோசமான ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸும் அவரை ஐபிஎல்லில் இருந்து வெளியேற்றியது.

மறுபுறம், தீபிகா பல்லிகலின் ஆதரவுடன், தினேஷ் கார்த்திக் வலையில் தீவிரமாக பயிற்சி செய்யத் தொடங்கினார். உள்நாட்டு கிரிக்கெட்டில் பெரிய ஸ்கோர் செய்யத் தொடங்கினார். விரைவில், அவர் ஐபிஎல்லில் தேர்வு செய்யப்பட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாகவும் ஆனார். அவர் தீபிகா பல்லிகலுடன் மிகவும் நெருக்கமாகிவிட்டார். தீபிகாவை மணந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மகேந்திர சிங் தோனி, அவரை மீண்டும் விக்கெட் கீப்பராக அணியில் பார்க்க விரும்புவதாக தினேஷுக்கு தகவல் கிடைத்தது. 2022 ஐபிஎல் போட்டிக்கான ஏலம் தொடங்கியது. ஆனால், இம்முறை CSKக்கு பதிலாக RCB இவரை வாங்கியது.

தினேஷின் மனைவி தீபிகாவும் விளையாடத் தொடங்கினா., அவர்களின் இரட்டைக் குழந்தைகள் பிறந்து 6 மாதங்களுக்குப் பிறகு, கிளாஸ்கோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் ஜோஷ்னா சின்னப்பாவுடன் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்றார்.’

இதுதான் தினேஷ் கார்த்திக்கின் கதை

தினேஷ் கார்த்திக் கதை ஏன் மீண்டும் வைரலானது?

தினேஷ் கார்த்திக், தீபிகா பல்லிக்கல் இருவரும் இரட்டை ஆண் குழந்தைகள் என அழகான குடும்பமாக அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருவதுடன் சமீபத்தில் புதிதாக மிக அழகான விலை உயர்ந்த வீடு ஒன்றையும் வாங்கியிருக்கிறார்கள். இதனையடுத்துதான் தினேஷ் கார்த்திக் கதை மீண்டும் வைரலானது.

மனைவி மற்றும் நண்பனின் துரோகம், அதனால் ஏற்பட்ட வீழ்ச்சி, இத்தனைக்குப் பிறகும் தீபிகா எப்படி காதலால் தினேஷ் கார்த்திக்கை மீட்டு கொண்டு வந்தார் என்பதையே நெட்டிசன்ஸ் இப்போது வியந்து பேசுகிறார்கள். அவர்கள் அனைவரும் சொல்வது இதுதான்: ‘அனைவருக்கும் நேரம் வரும், பொறுமையாக இருங்கள்.’

உண்மைதானே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...