No menu items!

ஜி,வி, பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து உண்மையா?

ஜி,வி, பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து உண்மையா?

கடந்த இரண்டு நாட்களாக இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் வைரலாகி கொண்டிருப்பது பிரபல இசை தம்பதியான ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவியின் விவாகரத்து பற்றிதான்.

இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இருவருடைய குடும்பமும் இந்த கருத்து வேறுபாட்டினை தூக்கிப் பிடித்து கொண்டிருக்கிறார்கள். இதனால் இவர்கள் இருவரும் கடந்த ஆறு மாத காலமாக தனித்தனியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கிசுகிசு கிளம்பியிருக்கிறது.

ஆனால் உண்மை என்ன?

ஜி.வி. பிரகாஷூம் சைந்தவியும் பள்ளி நாட்களிலேயே ஒருவருக்கொருவர் பரிச்சயமானவர்கள்.

இருவருக்குமிடையில் ஈர்ப்பு பின்னாளில் காதலனாது. இருவீட்டாரின் ஒப்புதலுடன் காதல் இல்லறத்திற்குள் நுழைந்தது. 2013-ல் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இப்போது இவர்களுக்கு நான்கு வயதில் மகளில் இருக்கிறாள். அவர் பெயர் அன்வி. 

திருமணத்திற்குப் பிறகும் கூட ஜி.வி. பிரகாஷின் இசையமைப்பில் சைந்தவி பாடினார். இவர்கள் இருவரும் பாடிய காதல் பாடல்கள் ரசனையோடு ரசிக்கவும் வைத்திருக்கின்றன.

இந்நிலையில்தான் இசையமைப்பாளராக மட்டும் இருந்த ஜி.வி. பிரகாஷ், திரைப்படங்களில் நடிக்கவும் ஆரம்பித்தார். இதன் பிறகுதான் இந்த இருவருக்கும் இடையே சின்னச்சின்ன மனஸ்தாபங்கள் ஆரம்பித்தன என்கிறார்கள் இவர்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள்

ஜி.வி. பிரகாஷ் நடிக்க ஆரம்பித்த பிறகு இவர் நடிக்கும் படங்களுக்கு இவரே இசையமைக்கவும் ஆரம்பித்தார். அந்தப் படங்களில் இடம்பெற்ற பாடல்களை பாட சைந்தவியை அவர் பெரும்பாலும் அழைத்ததே இல்லை.

இசையமைக்கும் போது இருந்த உறவு, ஜி.வி. பிரகாஷ் நடிக்க ஆரம்பித்ததுமே கொஞ்சம் கொஞ்சமாக உரசலில் விழ ஆரம்பித்தது. சைந்தவியைப் பொறுத்தவரை தனது கணவர் இசையமைத்தால் மட்டுமே போதும். நடிக்க வேண்டாம் என்ற எண்ணம்தான் அதிகமிருக்கிறதாம்.

அதோடு, ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் படங்களில் சில படங்கள் இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள், ஊதாரித்தனமான கதாபாத்திரங்கள் என இருப்பதையும் சைந்தவி விரும்பவில்லையாம்.

அடுத்து நடிகைகளுடன் நெருங்கி நடிப்பதையும் சைந்தவி ரசிக்கவில்லையாம். இதுவும் அவ்வப்போது பிரச்சினையாக, வாக்குவாத பொருளாகி இருக்கிறது.

இவை தொடர்பான விவாதங்கள் பலமுறை அரங்கேறியும், ஜி.வி. பிரகாஷூக்கு நடிப்பில் ஆர்வம் அதிகமிருப்பதால், நடிப்பதை விட முடியாது என்று மறுத்துவிட்டாராம்.

இந்த பிரச்சினைதான் கொஞ்சம் சூடாகி இருவருக்குள்ளும் வெடித்திருக்கிறது என்கிறார்கள். கணவன் – மனைவிக்கு இடையே ஏதாவது பிரச்சினை என்றால் மனைவி கோபித்து கொண்டு போவது வாடிக்கைதான். அப்படிதான் சைந்தவி விஷயத்திலும் நடந்திருக்கிறதாம்.

சைந்தவி கோபித்து கொண்டு போக, அது இருவீட்டார் தரப்பிலும் ஈகோவை கிளறியிருப்பதாகவும் கூறிகிறார்கள். இதுதான் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து என்று கிசுகிசு கிளம்பும் அளவிற்கு இப்போது பரபரப்பாகி இருக்கிறது.

கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சினையை அவர்கள் பேசி தீர்த்து கொள்ள தேவையான ப்ரைவஸியை ஊடகங்கள் கொடுத்தாலே போதும், தேவையில்லாத பிரச்சினைகள் எழாது.

ஆனால் பேசி தீர்த்து கொள்ள முடியாமல் போனால்… இன்னும் இரண்டு வாரங்களுக்குள் ஏதாவது ஒரு தகவல் வந்து சேரும் என முணுமுணுக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...