No menu items!

விவேக் மகள் திடீர் திருமணம் – காதலரை கைப்பிடித்தார்!

விவேக் மகள் திடீர் திருமணம் – காதலரை கைப்பிடித்தார்!

தேனி கண்ணன்


நடிகர் விவேக்கின் மகள் தேஜஸ்வினிக்கு நேற்று காலையில் திடீர் திருமணம் நடந்துள்ளது. பெரிய அளவில் ஆடம்பரங்கள் ஏதும் இல்லாமல், குடும்பத்தார் முன்னிலையில் இந்த திருமணம் நடந்திருக்கிறது.

விவேக்கின் மறைவுக்குப் பிறகு அவரது மனைவி அருள் செல்வி குடும்பத்தை நிர்வகித்து வருகிறார். விவேக்கின் மகள் தேஜஸ்வினி, பெங்களூருவில் தங்கி கணினி துறையில் பணியாற்றி வந்தார். அங்கு தேஜஸ்வினியுடன் பணிபுரிந்து வந்த பரத் என்ற சென்னை வாலிபருக்கும் அவருக்கும் நட்பு ஏற்பட்டு அது காதலாக மலர்ந்திருக்கிறது. இரு வீட்டாரும் அவர்களின் காதலுக்கு பச்சைக் கொடி காட்ட, இன்று திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

விவேக்கின் மனைவி அருள்ச்செல்வி கடந்த சில வாரங்களாக இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்தார். அதன்படி நேற்று (27-3-24) காலை சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் பத்மாவதி நகர் பகுதியில் அமைந்த விவேக்கின் வீட்டில் மிக எளிய முறையில் இரு வீட்டாரின் பெரியோர்கள் முன்னிலையில் தேஜஸ்வினிக்கும் பரத்திக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்திற்கு திரையுலகினரை சார்ந்த யாருக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை. .

குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமணத்திற்கு அந்தப் பகுதியில் இருந்த குடியிருப்பு வாசிகள் மட்டுமே வந்திருந்தனர். திருமணத்துக்கு வந்தவர்களுக்கு விவேக் ஆசைப்படி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மரக்கன்றுகளுடன் மூலிகை செடிகளின் கன்றுகளையும் விவேக்கின் மனைவி அருள் செல்வி வழங்கினார்.

விவேக் இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பதால் தனது இளைய மகள் பிறந்தவுடன் இளையராஜாவை பெயர் வைக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர்தான் விவேக்கின் மகளுக்கு தேஜஸ்வினி என்று பெயர் வைத்தார்.

விவேக்கின் மகள் தேஜஸ்வனிக்கு திருமணம் நடந்த தகவல் இணையத்தில் வெளியாகி புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது ரசிகர்கள் பலரும் விவேக்கை நினைவு கூர்ந்து அவரது மகளுக்கு தங்களது வாழ்த்துக்களையும் ஆசிகளையும் இணையத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...