No menu items!

கீர்த்தியின் காதலும், பெற்றோருடன் மோதலும்

கீர்த்தியின் காதலும், பெற்றோருடன் மோதலும்

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது சோஷியல் மீடியா அக்கெளண்ட்டில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். அதில் கீர்த்தி சுரேஷூம் மற்றொரு ஆணும் ஒரே மாதிரியான மஞ்சள் நிற ஜாக்கெட் அணிந்து கொண்டு, சிரித்தபடியே போஸ் கொடுத்திருந்தனர்.

இதைப் பார்த்ததுமே, இவர்தான் கீர்த்தி சுரேஷின் ஆண் நண்பர் என்று சிலரும், கீர்த்தியின் காதலர் என்று பலரும் கமெண்ட் அடிக்க பரபரப்பானது.

ஆரம்பத்தில் கீர்த்தி இந்த கமெண்ட்களுக்கெல்லாம் எந்தவிதமான பதிலையும் தட்டிவிடாமல், வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தார்.

கீர்த்தி சுரேஷூடன் நெருக்கமாக இருக்கும் யார் அந்த நபர் என்று நோண்டியபோது, அவர் பெயர் பர்ஹான் பின் லியாகத்.. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் துபாயில் மிகப்பிரபலமான ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்டாக இருப்பவர் என்றும் தெரிய வந்தது.
இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக டேட்டிங் போய் கொண்டிருப்பதாகவும், அந்த புகைப்படத்தை பர்ஹான் முதலில் சோஷியல் மீடியாவில் பதிட்டதாகவும் அதன் பிறகே, கீர்த்தி சுரேஷ் அதே பட த்தை தனது அக்கெளண்ட்டில் பதிவேற்றம் செய்ததாகவும் தெரிய வந்தது.

உடனேயே பல இணையதளங்கள், பர்ஹானை கீர்த்தியின் வருங்கால கணவர் என்கிற ரீதியில் செய்திகளை வெளியிட்டன. இவர்கள் இருவரும் மிக விரைவிலேயே திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறின.

கீர்த்தி சுரேஷ் அமைதி காத்தபடியே இருந்தாலும், இந்த கிசுகிசு முடிந்தபாடில்லை.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், கீர்த்தியின் அப்பாவும், மலையாள பட தயாரிப்பாளருமான சுரேஷ் திடீரென மீடியா வெளிச்சத்திற்குள் வந்தார். கீர்த்தி நடிக்க வந்ததில் இருந்து இதுவரையில் வாயே திறக்காத அவர், முதல் முறையாக கீர்த்தி காதல் கிசுகிசு பற்றி கோபத்தில் கமெண்ட் அடித்தார்.

’தயவுசெய்து என் மகளின் வாழ்க்கையை கெடுத்துவிடாதீர்கள்’ என்கிற ரீதியில் மீடியாவை கேட்டுக்கொண்டார்.

மற்றொரு பக்கம், கீர்த்திக்கு ஒருவர் மீது நல்ல அபிப்பிராயம் இருப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறப்படுகிறது. கீர்த்தியின் இந்த முடிவில் அவரது அப்பாவுக்கும், அம்மாவுக்கும் உடன்பாடு இல்லையாம்.

எப்படியாவது தனக்குப் பிடித்த நண்பரை திருமணம் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன், இவர் என்னுடைய நல்ல நண்பர் என கீர்த்தியே போஸ்ட் செய்து வருவதாகவும் கூறுகிறார்கள். இதை அப்படியே விட்டுவிட்டால் அதன் பிறகு ஒன்றும் செய்ய முடியாது என புரிந்து கொண்ட பிறகே, கீர்த்தியின் அப்பா மெளனம் கலைத்ததாகவும் கூறுகிறார்கள்.

கீர்த்தியின் காதல் என்று வரும் கிசுகிசுக்களை கீர்த்தியால் நேரடியாக மறுக்கவும் முடியவில்லை. அதேபோல் அவரது பெற்றோர்களின் எதிர்ப்பையும் சமாளிக்க முடியவில்லை. இதனால் ரொம்பவே மன உளைச்சலில் அவர் இருப்பதாக கீர்த்திக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...