No menu items!

ECR – மர்ம பங்களாக்கள் மாட்டும் ஜோடிகள்!

ECR – மர்ம பங்களாக்கள் மாட்டும் ஜோடிகள்!

வார நாட்களின் அலுப்பை தள்ளி வைக்க, வார இறுதிக் கொண்டாட்டத்தை இனிமையாக்க சென்னை இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் இளைப்பாறும் இடமாக இருப்பது சென்னை ஈசிஆர் சாலை. இங்கு ஏராளமான பண்ணை வீடுகள், ரிசார்ட்டுகள், ஓட்டல்கள் என்ன பரவிக் கிடக்கின்றன. எந்த பட்ஜெட்டிலும் எந்த கேள்வியும் கேட்காத இடங்கள் வாடகைக்கு கிடைக்கின்றன.

அப்படி ஒரு ரிசார்டில் நடந்த விபரீதம் வெளியில் வந்திருக்கிறது. போலீஸ் வழக்காக மாறியிருக்கிறது.

கூவத்தூர் அருகே ஒரு ரிசார்ட். நடிகை காதல் சந்தியாவுடையது என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. அந்த ரிசார்ட்டுக்கு ஒரு ஜோடி வருகிறது. அறை எடுக்கிறது. வார இறுதி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு களைத்து கட்டிலில் தூங்குகிறது.

நடு இரவில் அந்தப் பெண்ணில் உடலில் கரங்கள் படருகின்றன. அவர் தட்டிவிடுகிறார். மீண்டும் பரவுகிறது. தூக்கத்திலேயே திரும்பி தனது ஆண் நண்பரைப் பார்க்கிறார். அவர் குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருக்கிறார். சட்டென்று எழுந்து பார்க்கிறார். ஆனால் யாரும் இல்லை.

மீண்டும் உறக்கத்துக்குச் செல்கிறார். மீண்டும் கரங்கள் உடலைத் தடவுகின்றன. இந்த முறை சட்டென்று எழந்து பார்க்கிறார். ஒருவன் அறைக் கதவைத் திறந்துக் கொண்டு வெளியில் ஓடுகிறான். தூக்கத்திலிருந்த தோழனை எழுப்பி இருவரும் அவனைத் துரத்துகிறார்கள். பிடிக்கிறார்கள். கூச்சல் கேட்டு மற்ற அறைக்காரர்களும் வெளியில் ஓடி வந்து அவனைப் பிடிக்கிறார்கள். அடிக்கிறார்கள்.

அறைக்குள் புகுந்து சில்மிஷங்கள் செய்தவர் அந்த ரிசார்ட் ஊழியன். அறைகளை சுத்தம் செய்வது அவனுடைய வேலை. அந்த ரிசார்ட்டில் அறைகளை சுத்தம் செய்பவர்களிடம் அறைகளின் சாவிகள் இருக்கும். தங்கியிருப்பவர்கள் வெளியில் சென்றிருக்கும்போது அறையை சுத்தம் செய்து விட்டு செல்வார்கள்.

ஆனால் இந்த ஆசாமி அறையை சுத்தம் செய்யவது மட்டுமில்லாமல் பல அட்டூழியங்களையும் செய்திருக்கிறான்.

அந்த ஜோடி படுக்கச் சென்றதும் நள்ளிரவில் தன்னிடமிருந்த சாவியை வைத்து திறந்து தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணிடம் சில்மிஷம் செய்திருக்கிறான். பெண் உஷாராக இருக்கவே மாட்டிக் கொண்டான்.

அவனை விசாரித்தபோது பல பகீர் தகவல்களும் வெளி வந்திருக்கின்றன.

அந்த ஆசாமியின் மொபைலை ஆராய்ந்தபோது உள்ளே உள்நாடு வெளிநாடு என பல செக்ஸ் வீடியோக்கள் இருந்திருக்கின்றன. அது மட்டுமில்லாமல் அறையில் தங்கிய பெண்கள் குளிப்பது, ஆடை மாற்றுவது, செக்ஸில் ஈடுபடுவது போன்றவற்றையும் படமெடுத்திருக்கிறான்.

அறையை சுத்தம் செய்வதுபோல் அறைக்குள் வந்து வீடியோ கேமிராவை படுக்கையறையில் அல்லது குளியலறையில் இயக்கி ஒளித்து வைத்து விடுவார். அது உள்ளே நடப்பதை பதிவு செய்திருக்கும். பிறகு அறையை சுத்தம் செய்வது போல் வந்து மொபைலை எடுத்துச் சென்றுவிடுவார். இது அவனின் பழக்கமாக இருந்திருக்கிறது.

ரகசியமாக எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்களை காட்டி ஜோடிகளை மிரட்டி பணம் பறித்தானா என்ற ரீதியிலும் விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்த கெட்ட காரியங்களை செய்தது இவன் மட்டுமா அல்லது கூட்டாளிகள் இருக்கிறார்களா என்பதையும் காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

அந்தப் பகுதியில் வசிப்பவர்களிடம் பேசினால் இது போன்று பல கதைகளை கூறுகிறார்கள்.

ஈசிஆர் சாலையில் பல வீடுகளில் அதன் சொந்தக்காரர்கள் வசிப்பதில்லை. அவர்கள் எப்போதாவதுதான் ஓய்வுக்கு வருகிறார்கள். அவர்கள் இல்லாத நேரங்களில் அந்த வீட்டை பராமரிப்பவர், காதல் ஜோடிகளுக்கு சில மணி நேரங்களுக்கென்று வாடகைக்கு விடும் சம்பவங்கள் அதிகம் இருக்கின்றன. ஆனால் இது போன்று தனியார் இடங்களுக்கு செல்லும் ஜோடிகளுக்கு ஆபத்து அதிகம். சில சமயங்களில் ரவுடிகள் உள்ளே வந்து அந்தப் பெண்ணை சேதப்படுத்திய சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

பல கடலோர பங்களாக்கள் ஈசிஆர் பகுதிகளில் வாடகைக்கு கிடைக்கின்றன. இந்த பங்களாக்களில் நீச்சல் குளங்கள் இருக்கின்றன. பாதுகாப்பு என்று கூறி பங்களாவை சுற்று சிசிடிவி கேமிராக்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன. தெரிந்து பொருத்தப்பட்ட கேமிராக்கள் தவிர சில பங்களாக்களில் ரகசிய கேமிராக்களும் இருக்கின்றன. அவை தங்குபவர்களின் அந்தரங்க அனுபவங்களை படமாக்குகின்ற என்றும் சொல்லுகிறார்கள்.

ஈசிஆர் சாலை விடுதிகளில் இரவைக் கழிக்க திட்டமிடுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...