No menu items!

சூர்யா பட ஹீரோயினுக்கு டும் டும் டும்!

சூர்யா பட ஹீரோயினுக்கு டும் டும் டும்!

பொதுவாகவே நடிகைகள் காதலில் விழுந்தாலோ, திருமணம் செய்து கொண்டாலோ ஹீரோக்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல், அவர்களை தங்களுக்கு அக்காவாகவோ அல்லது அம்மாவாகவோ அல்லது அண்ணியாக நடிக்க வைத்துவிடுவார்கள்.

இதனாலேயே நடிகைகள் தங்களது காதலை வெளிப்படையாக சொல்லிக்கொள்வது இல்லை. மார்க்கெட் இருக்கும் போது திருமணம் செய்து கொள்வதும் இல்லை.

ஆனால் ரகுல் ப்ரீத் சிங், இந்த மாதிரி நடிகை இல்லை. காரணம் இவர் நடித்து கொண்டிருக்கும் போதே, நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜாக்கி பாக்நானி என்பவருடன் காதல் உறவில் இருப்பதாகவும், நாங்கள் இருவரும் லிவ் – இன் முறையில் சேர்ந்து வாழ்வதாகவும் கூறினார். அக்டோபர் 2021-ல் இவர்கள் தங்களது நெருக்கமான உறவை வெளியுலகிற்கு அறிவித்தனர்.

இப்போது லிவ்- இன் முறையில் வாழ்ந்தது போதும். திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று அறிவித்து இருக்கிறார். பிப்ரவரியில் திருமணம். கோவாவில் கொண்டாட்டம் என்று ரகுல் ப்ரீத் சிங் முடிவு செய்திருக்கிறார்.

’உன்னோடு இருக்கும் ஒவ்வொரு மணித்துளியும் மறக்காது கண்மணியே. உன்னோடு சேர்ந்து பயணிக்கும் இந்த வாழ்வு சூப்பராக இருக்கிறது. ஒரு நொடி கூட எனக்கு சலிப்பு ஏற்பட்டது இல்லை. நீ எனக்கு ஒரு கம்பானியனுக்கும் அப்பாற்பட்டவள். என்னுடைய நம்பிக்கை. சேட்டை செய்கிற விஷயங்களில் என்னுடைய பார்ட்னர், காதலையும், சிரிப்பையும் ஒன்றாக கொண்டாடுவோம்.’ இப்படி ரகுல் பிரீத் சிங் தலையில் எவரெஸ்ட் உச்சியில் இருக்கும் மொத்த பனிக்கட்டியையும் தூக்கி வைத்திருப்பது போல் ஐஸ் வைத்து கொண்டிருக்கிறார்.

பிப்ரவரியில்தான் திருமணம் என்றாலும் இவர்கள் இருவரும் இப்பொழுதே கொண்டாட்ட மூடில் ஒவ்வொரு இடமாக சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார்கள். வெகு விரைவிலேயே இந்த ஜோடி தங்களது திருமணம் குறித்து முறைப்படி அறிவிக்க இருக்கிறார்கள்.

திருமணத்திற்கு பின்பும் நடிக்க ஆர்வம் காட்டி வரும் ரகுல் ப்ரீத் சிங், ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸனுடன் நடித்திருக்கும் ‘இந்தியன் 2’ பட த்தைதான் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...