No menu items!

என்னை மதிக்கவே மாட்டாங்க – மிருணாள் தாகூர்

என்னை மதிக்கவே மாட்டாங்க – மிருணாள் தாகூர்

வயது 31. ஆனால் இப்போதுதான் மிருணாள் தாகூருக்கு சுக்ர திசை அடித்திருக்கிறது. இருபது இருபத்தைந்து வயதாகும் போது, இன்னும் இளமையாக இருக்கும் போதே கிடைக்காத அங்கீகாரம் இப்பொழுதுதான் கிடைத்திருக்கிறது. இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இவரும் இருக்கிறார். இவ்வளவுக்கும் இவர் நடித்து பெயர் வாங்கிய தென்னிந்தியப் படங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று ‘சீதா ராமம்’ அடுத்து ‘ஹாய் நானா’

ஆனால் மிருணாள் தாகூர் சின்ன வயதிலேயே ஹிந்தி டிவி சிரீயல்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு இவர் ஹிந்தி மற்றும் மராத்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இதுதான் தனக்கு சோதனையான காலக்கட்டம் என்று மனம் திறந்திருக்கிறார் மிருணாள் தாகூர்.

‘நான் நடிக்க வந்தப்ப, பல பிரபலங்கள் என்னை மதிக்கவே மாட்டாங்க.  நான் பக்கத்துலேயே இருந்தாலும், நான் அங்கே இல்லாத மாதிரி அவங்களோட பேச்சு, நடவடிக்கை எல்லாம் இருக்கும். அவங்க கூட அடுத்த காட்சியில நடிக்கிறதுக்கு இருந்தாலும் கூட, அங்கேயும் அப்படிதான் இருப்பாங்க.

இன்னும் சொல்லப் போனால், டிவி நிகழ்ச்சிகள், விழாக்கள் அல்லது ஷூட்டிங் நடக்கும் செட் என எதுவாக இருந்தாலும் சரி, சில பிரபல நடிகர்கள் என்னை யாருன்னே தெரியாத மாதிரி காட்டிக்குவாங்க. பல முறை பார்த்திருந்தாலும், அறிமுகம் இல்லாத மாதிரி பேசிட்டு அங்கிருந்து நகர்ந்திருவாங்க.

ஆனால் அவங்க எல்லோருக்கும் நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். அவங்க அப்படி இல்லாமப் போயிருந்தால், நான் இன்னிக்கு இப்படி இல்லாமல் போயிருப்பேன். என்கிட்ட நெகட்டிவ்வாக இருந்தவங்களுக்கும் நன்றி. பாஸிட்டிவாக இருந்தவங்களுக்கும் என் நன்றி/’’ என்று மனம் திறந்து பேசியிருக்கிறார் மிருணாள் தாகூர்.

தெலுங்குப் பக்கமே வட்டமடிக்கும் இந்த புன்னகை ராணியை வெகு சீக்கிரமே கோலிவுட்டில் களமிறக்க இருக்கிறார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். கூடிய சீக்கிரமே இவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...