No menu items!

விஜய்க்கு ஆளுநர் வைத்த நிபந்தனை!

விஜய்க்கு ஆளுநர் வைத்த நிபந்தனை!

தமிழ்நாட்டின் 14வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க தமிழ்நாடு ஆளுநர் சில ஆலோசனைகளை கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 11 இடங்கள் தேவைப்படும் நிலையில் அரசியல் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இருப்பினும், ஆட்சி அமைக்க உரிமை கோரி இன்று சந்திக்க நேரம் கேட்டு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில் ஆட்சி அமைக்க அழைத்தால் அடுத்த 2 வாரங்களில் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதாக விஜய் குறிப்பிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதை தொடர்ந்து சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு சென்ற தவெக தலைவர் விஜய்க்கு விசில் அடித்து, கை தட்டியும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின், பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு சென்ற விஜய், கட்சியின் கொள்கைத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, பனையூர் அலுவலகத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஏறத்தாழ 3 மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெக சட்டமன்ற குழுத் தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டார். மேலும், விஜய் முதலமைச்சராக பதவியேற்க ஆதரவு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் 14வது முதலமைச்சராக விஜய் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழாவை நடத்தவும், விஜயுடன் சேர்த்து 21 அமைச்சர்களும் பதவியேற்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர்கள் தேர்வு தொடர்பாக பட்டினப்பாக்கம் இல்லத்திலும் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார்.

அதன்படி, தவெக உத்தேச அமைச்சர்கள் பட்டியல் குறித்த தகவல் வெளியான நிலையில், என்.ஆனந்த், அருண்ராஜ், செங்கோட்டையன், சி.டி.ஆர்.நிர்மல்குமார், தமிழன் பார்த்திபன், சரவணன், முகமது பர்வேஸ், விஜய் சரவணன் ஆகியோரும் கல்லாணை, விஜயலட்சுமி, டி.கே. பிரபு, பாலாஜி, சத்யபாமா, ராஜ்மோகன், ஜே.சி.டி.பிரபாகர், வி.எஸ்.பாபு, சம்பத்குமார், மரிய வில்சன், சபரிநாதன், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் அமைச்சராவார்கள் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கூட்டணி அமைக்காமல் வெளியிலிருந்து ஆதரவைப் பெற்றும் பெரும்பான்மையை தவெக தலைவர் விஜய் நிரூபிக்கலாம் என்று தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பு வகிக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார். நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாகப் பேட்டியளித்த அவர், தவெக தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் கேட்டிருப்பதாகக் கூறினார்.

தனக்கு 35 விழுக்காடு வாக்கு இருப்பதாக விஜய் கூறிய நிலையில், எத்தனை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது என்பதை கேட்டிருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாகக் கூறிய ஆளுநர், புதிய அரசு அமையும் வரை பதவியில் நீடிக்கும்படி அவரிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...