No menu items!

பேரறிவாளன் வழக்கு நீதிபதியின் மறுபக்கம்

பேரறிவாளன் வழக்கு நீதிபதியின் மறுபக்கம்

பேரறிவாளன் வழக்கில் அவருக்கு விடுதலை அளித்து தீர்ப்பளித்ததன் மூலம் இந்தியா முழுக்க பிரபலமானவர் நீதிபதி நாகேஸ்வர ராவ். பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கியதுடன் ஆளுநருக்கான அதிகாரம் தொடர்பான இவரது கருத்துகளும் நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கிய நாகேஸ்வர ராவ், உச்சநீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவருக்கான பிரிவு உபச்சார விழா வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் அவரைப் பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்பு, அவர் கிரிக்கெட் வீரராகவும், திரைப்பட நடிகராகவும் இருந்திருக்கிறார்.

விழாவில் பேசிய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷனின் துணைத் தலைவருமான பிரதீப் ராய், “நாகேஸ்வர ராவ் பல படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். குறிப்பாக ‘கானூன் அப்னா அப்னா’ என்ற படத்தில் சஞ்சய் தத் மற்றும் காதர் கானுடன் இணைந்து அவர் நடித்துள்ளார். அத்துடன் ஆந்திர மாநிலத்துக்காக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் ஆடியுள்ளார். சட்டம் மட்டுமின்றி பல துறைகளில் அவர் வல்லவர் என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம்” என்றார்

இதற்கு பதிலளித்து பேசிய நாகேஸ்வர ராவ், “என் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் நாடக இயக்குநராக இருந்தார். அவர் கேட்டுக்கொண்டதால் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினேன். பின்னர் அது திரைப்படங்களிலும் தொடர்ந்தது. ஆனால் எனக்கு நடிப்பதில் விருப்பமில்லை. வழக்கறிஞராக இருக்கத்தான் விரும்பினேன்.

வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் நடிப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே. நீதிபதிகளும் சில சமயம் அப்படி நடிப்பதுண்டு. கிரிக்கெட் மீது சிறு வயதில் இருந்தே எனக்கு விருப்பம் அதிகம். இப்போதுகூட ஐபிஎல் போட்டிகளை நான் தவறாமல் பார்ப்பேன். தோல்வியைக் கண்டு துவளக்கூடாது என்ற பாடத்தை கிரிக்கெட்தான் எனக்கு கற்றுக்கொடுத்தது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...