No menu items!

நயன்தாரா-விக்னேஷ் சிவன் கல்யாணம் : உண்மையா? விளம்பரமா?

நயன்தாரா-விக்னேஷ் சிவன் கல்யாணம் : உண்மையா? விளம்பரமா?

சமீபத்தில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கோயில் கோயிலாக சுற்றிய போதே அனைவருக்கும் சந்தேகம். இப்போது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது.

நயனும் விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என்ற தகவலால் கோலிவுட் ஹாட்டாகி இருக்கிறது.

நயனும் விக்னேஷ் சிவனும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். நானும் ரவுடிதான் படத்தில் நட்பாய் தொடங்கியது இவர்கள் நட்பு. அது காதலாய் மாறி கனிந்துருகி கல்யாணத்துக்கு தயாராகிவிட்டது.

இனிதான் கல்யாணம் என்றாலும் இருவரும் இணைந்துதான் வாழ்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. பிரியாத ஜோடியாக பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சில வாரங்களுக்கு முன் சென்னை பாரிமுனையில்  இருக்கும் காளிகாம்பாள் கோவிலுக்கு இருவரும் சென்று தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்துள்ளதாக இருவருக்கும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நயன்தாரா நெற்றியில் குங்குமம் வைத்திருந்த புகைப்படம் சமீபத்தில் வைரலானது. அதனால் அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற செய்தி இணையதளங்களில் பரபரப்பு செய்தியாக மாறியது.  இந்த செய்திகளை இருவரும் வழக்கம் போல் மறுக்கவில்லை.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் என்றுமே தங்கள் காதலை மறைத்ததில்லை. வெளிப்படையான காதலுடன் ரசிகர்களுக்கு தரிசனம் தந்துக் கொண்டிருக்கிறார்கள்.

விரைவில் திருமணம் என்ற செய்தி உண்மையா என்று விக்னேஷ் சிவனின் தோழமை தொடர்புகளிடம் விசாரித்தோம்.

உண்மைதான். கிசுகிசுக்களுடன் வாழ்ந்தது போதும் என்று நயன், விக்னேஷ் சிவன் ஜோடி கருதுகிறதாம்.

அஜித் ஹீரோவாக நடிக்கும்  ‘ஏகே 62’ திரைப்படம் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்க இருக்கிறது.

அந்தப் பணியில் விக்னேஷ் சிவன் இறங்கி விட்டால் ஒரு வருடம் இழுத்துவிடும் என்பதால் அஜித் படம் துவங்குவதற்கு முன்பே கல்யாணம் செய்துக் கொள்ளலாம் என்று இந்த ஜோடி முடிவு செய்திருக்கிறது என்கிறது விக்னேஷ் சிவன் நட்பு வட்டாரம்.  ஜூன் மாதம் இவர்கள் திருமணம் நடக்க உள்ளது என்கிறார்கள்.

இதையெல்லாம் மறுக்கிறது மற்றொரு திரை வட்டாரம். இப்போதே கல்யாணம் செய்தது போல்தான் வாழ்கிறார்கள். அவர்கள் ஏன் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும்?  என்ற கேள்வியை எழுப்புவதோடு இன்னொரு சங்கதியையும் குறிப்பிடுகிறார்கள்.

நயனும் விக்னேஷ் சிவனும் இணைந்து பணியாற்றிய ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கு பரபரப்பை கூட்டும் விதத்தில் கல்யாண செய்தியை கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.

இந்த செய்தி பரவினால் படத்துக்கான ‘ஒபனிங்’ வேகமாக இருக்கும் என்ற திட்டத்தில் கல்யாண திட்டத்தை சமூக ஊடகங்களில் பரவ விடுகிறார்கள் என்ற கருத்தையும் இவர்கள் முன் வைக்கிறார்கள்.

நயன், விக்னேஷ் சிவன் தான் உண்மையை உலகுக்கு சொல்ல வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...