No menu items!

விஜய்யை வீழ்த்த நடக்கும் முயற்சி ! – மாணிக்கம் தாகூர்

விஜய்யை வீழ்த்த நடக்கும் முயற்சி ! – மாணிக்கம் தாகூர்

விஜய் என்ற மனிதனை வீழ்த்த வாழ்நாள் எதிரிகளான இரண்டு திராவிட கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இரண்டு திராவிட கட்சிகள். வாழ்நாள் எதிரிகள். ஒரே இரவில் ஒன்றானார்கள். தமிழகத்திற்காக இல்லை. மதச்சார்பின்மைக்காக இல்லை. ஒரே ஒரு மனிதனை நிறுத்த, விஜய்யை வீழ்த்த நடக்கும் முயற்சியை காங்கிரஸ் தெளிவாக பார்த்தது, வெளியேறியது. ஆர்எஸ்எஸ் / பாஜகவின் பி-டீமுடன் சேர்ந்து கொண்ட உங்களை மதச்சார்பற்றவர் என்று சொல்ல முடியாது.

‘நிலையான அரசு’ என்பது இரண்டு பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தை காக்கும் அரசியல் மொழி. காங்கிரஸ் சரியாகவே வெளியேறியது. திமுக இன்று தன் முகமூடியை கழற்றுமா? யார் துரோகி?” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற சூழலில், காங்கிரஸின் ஆதரவை விஜய் கோரினார். இதன் தொடர்ச்சியாக, 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் விஜய்யிடம் தங்கள் ஆதரவுக் கடிதத்தை 6-ம் தேதி வழங்கினர். இது திமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டதாக பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

சென்னை அண்ணா அறி​வால​யத்​தில் திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் தலைமையில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில்“ கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் பெற்ற வெற்றியைப் பணயம் வைத்து மாற்று அணிக்கு மூன்று நாட்களுக்குள் காங்கிரஸ் கட்சி மாறியதன் மூலம் அக்கட்சி தனது பழைய குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...