No menu items!

அடுத்து விஜய் சர்க்கார்?

அடுத்து விஜய் சர்க்கார்?

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக, அதிமுக, இந்த தேர்தலில் புதியதாக களம் கண்ட விஜய், நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி நிலவிய நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 5.73 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 2.35 கோடி ஆண்கள், 2.52 கோடி பெண்கள், 4,517 மூன்றாம் பாலினத்தவர் என 4.87 கோடி பேர் வாக்களித்திருந்தனர். அதாவது 85.10 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

வாக்கு எண்ணிக்கை திங்கட்கிழமை (மே 4) காலை 8 மணி அளவில் தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. அடுத்து 30 நிமிடங்களில் சுமார் 8.30 மணி அளவில் மின்னணு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. முதல் சுற்று எண்ணிக்கை முடிந்தவுடன் மின்னணு வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு தொகுதி வாரியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

திமுக கணவு முறியடிப்பு?

தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி என்ற சாதனையை நிகழ்த்தும் முனைப்பில் இந்த தேர்தலை எதிர்கொண்ட திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியாக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை இழந்து வருகிறது. திமுகவும் இரண்டாவது இடத்தைப் பெறும் முனைப்பில் இருப்பது போன்று தகவல்கள் வெளியாகின்றன.

மாற்றுச் சக்தி என கோஷத்துடன் விஜய் தொடங்கிய புதிய கட்சி தற்போது பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அரசியல் மாற்றம் என்ற முழக்கத்துடன் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியும் முன்னிலை வகித்து வருகிறது.

60 ஆண்டுகளாக கோட்டை சிக்கலில் உடைந்தது?

தமிழகத்தில் 1967 இல் இருந்து திமுக, அதிமுக என மாறி மாறி ஆண்டு வந்த நிலையில், 60 ஆண்டுகளாகச் சிக்கலிலேயே தவித்து வந்த தமிழக அரசியல் அமைப்பு தற்போது விஜய் அரசின் ‘மாற்றத்தை’ எதிர்கொண்டு புதிய பாதையை நோக்கி நகர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

2026 தேர்தல் கருதுகையில் கணிப்புகள் தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும், நடிகர் விஜயின் தலைமையில் பெரும்பாலான வாக்குகளைப் பெறும் எனவும் கணிக்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம்ஜிஆருக்கு அடுத்து விஜய்?

1977-க்கு பிறகு முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நடந்திருக்கிறது உறுதியாகியுள்ளது. நடிகர் விஜய் தலைமையில் ஆட்சி அமைவும் என்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திராவிட கட்சிகள் இல்லாத முதல் ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. ஒரே தேர்தலில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்த எம்ஜிஆர் தொடர்ந்து, 49 ஆண்டுகளுக்கு பிறகு 2026 இல் விஜய் ஆட்சியை பிடிப்பது உறுதியாக உள்ளது.

திருமாவின் முன்னாள் தலைவர்கள், அமைச்சர்கள் பலரும் தற்போது விஜய்யின் பக்கம் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

தற்போதைய முன்னிலை நிலவரம் தொடர்ந்தால் 60 ஆண்டுகளாக திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, ஒரு மாற்று அரசியல் தொடக்கமாக இது அமையும்.

காலை 11 மணி நிலவரப்படி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 105 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 78 இடங்களிலும், திமுக கூட்டணி 50 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

தமிழக அரசியல் வரலாற்றில் திமுகவில் இருந்து வெளியேறி கட்சி தொடங்கி 1977 இல் நடந்த எம்ஜிஆர் ஆட்சி ஆரம்பித்தது முக்கியமானது. அதன்பிறகு சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...