No menu items!

திருச்செந்தூர் அடுத்து சீரடி விஜய் ஆன்மிகப் பயணம்

திருச்செந்தூர் அடுத்து சீரடி விஜய் ஆன்மிகப் பயணம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.

வருகின்ற மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று அதிகாலை 5 மணிக்கு திருச்செந்தூர் சென்ற விஜய், கடல் நீராடிய பிறகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் சார்பில் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, திருச்செந்தூர் கோவிலில் உள்ள சத்ரு சம்ஹார யாகம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், அடுத்தக்கட்டமாக வாக்குப்பதிவுக்கு முன்னதாக நாளை மே 3, மகாராஷ்டிர மாநிலம் சீரடி சாய் பாபா கோவிலுக்கு விஜய் செல்லத் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சீரடி சாய் பாபா கோவிலுக்கு அடிக்கடி சென்று விஜய் தரிசனம் செய்துள்ளார். கடைசியாக தி கோட் திரைப்படம் வெளியீட்டுக்கு முன்னதாகவும், தமிழக முதல் மாநாட்டுக்கு முன்னதாகவும் விஜய் சீரடி சென்று குறிபிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...