No menu items!

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அன்புக் கரங்கள்  திட்டம் -தமிழக அரசு

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அன்புக் கரங்கள்  திட்டம் -தமிழக அரசு

தமிழக அரசு பெற்​றோரை இழந்த குழந்​தைகளை அரவணைத்து தொடர்ந்து பாது​காக்​கும் வகை​யில், 18 வயது வரையி​லான பள்​ளிப் படிப்பு முடி​யும் வரை இடைநிற்​றல் இன்றி கல்​வியை தொடர அவர்​களுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்​கும் ‘அன்​புக்​ கரங்​கள்’ திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் இன்று சென்​னை​யில் தொடங்கி வைக்​கிறார்.

இதுதொடர்​பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: ஏற்​றமிகு தமிழகத்தை உரு​வாக்க, குழந்​தைகளின் கல்வி மற்​றும் அவர்​களது சீரான வளர்ச்​சிக்கு தமிழக அரசு பல்​வேறு திட்​டங்​களை சிறப்​பான முறை​யில் செயல்​படுத்தி வரு​கிறது. மிக​வும் வறுமை​யில் உள்ள குடும்​பங்​களை அடை​யாளம் கண்​டு, அவர்​களது வாழ்க்​கைத் தரத்தை மேம்​படுத்த ‘தா​யு​மானவர்’ திட்​டத்தை தமிழக அரசு அறி​முகம் செய்​துள்​ளது. இதன் ஒரு பகு​தி​யாக, பெற்​றோர் இரு​வரை​யும் இழந்த குழந்​தைகள் மற்​றும் பெற்​றோரில் ஒரு​வரை இழந்து மற்​றொரு பெற்​றோ​ரால் பராமரிக்க இயலாத குழந்​தைகளை அரவணைத்து தொடர்ந்து பாது​காக்​கும் வகை​யில் ‘அன்​புக்​ கரங்​கள்’ திட்​டம் அறிவிக்​கப்​பட்​டது.

அந்த குழந்​தைகளின் 18 வயது வரையி​லான பள்​ளிப் படிப்பு முடி​யும் வரை இடைநிற்​றல் இன்றி கல்​வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித் ​தொகை வழங்​கப்​படும். அது மட்​டுமின்​றி, பள்​ளிப் படிப்பை முடித்த பிறகு கல்​லூரிக் கல்வி மற்​றும் உரிய திறன் மேம்​பாட்டு பயிற்​சிகளும் அவர்​களுக்கு வழங்​கப்​படும். இதற்கு வழி​வகை செய்​யும் ‘அன்​புக்​ கரங்​கள்’ திட்​டத்தை சென்னை கலை​வாணர் அரங்​கில் முதல்​வர் ஸ்டா​லின் இன்று தொடங்கி வைத்​து, குழந்​தைகளுக்கு உதவித் தொகையை வழங்க உள்​ளார்.

மேலும், பெற்​றோர் இரு​வரை​யும் இழந்​து, பிளஸ் 2 முடித்​து,பல்​வேறு உயர்​கல்வி நிறு​வனங்​களில் தமிழக அரசின் முயற்​சி​யால் சேர்க்​கப்​பட்​டுள்ள மாணவ, மாணவி​களுக்கு மடிக்​கணினிகளை​யும் முதல்​வர் வழங்க உள்​ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...