அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளைக் கடத்திக் கொண்டு போகும் கும்பலைப் பற்றிய கதை. நிஜத்தில் நடந்த சம்பவத்தை இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் திரைக்கதையாக்கி கொடுத்திருக்கிறார்.
நெடுஞ்சாலைகளைல் நடக்கும் எதிர்பாராத விபத்துக்களில் நடக்கும் பயங்கர சதியும், குழந்தைகளை அவர்களை கடத்தும் பின்னணியும் திகிலடைய வைக்கிறது.
அதற்கு அதர்வா கதாபாத்திரம் நன்றாக கைக்கொடுத்திருக்கிறது. வெறுத்துப் போன உணர்வுகளில் காட்டி நடித்திருக்கிறார். அதுவும் மனைவி மீது வைத்திருக்கும் பாசத்திற்காக குழந்தையைத் தேடி களத்தில் இறங்கும் அவருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருகிறது.நல்ல கதை.
ஆனால் எல்லா படங்களிலும் பார்த்த அதே டெம்ளேட்டுடன் சொல்லியிருப்பதைத்தான் தாங்க முடியவில்லை. பெண் பார்க்கும் படத்தில் பாடல், க்ளைமேக்ஸ் காட்சியில் வில்லன் கும்பல் கவர்ச்சி பாடல் சண்டை, குழந்தை அம்மாவின் தாலியைப் பிடித்து இழுக்கும் காட்சி எல்லாம் நாங்க ராம நாராயணன் படத்திலேயே பார்த்து விட்டோம் என்று சொல்லத் தோன்றுகிறது.
அதோடு படலும் சண்டைக் காட்சிகளும் நரபலியும் அலுப்பூட்டும் விதத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் தவிர்த்து விட்டுப் பார்த்தால் குழந்தைக் கடத்தலில் இருக்கும் மர்மக்கும்பலை பற்றிய படம் வித்தியாசமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேஷன்.
க்ளைமேக்ஸ் காட்சி வந்தவுடன் ஒரு வழியாக படம் முடிந்து விட்டது என்றே தோன்றுகிறது.