பசிபிக் கடலில் கிடைக்கும் இயற்கை வளத்திற்காக அரசியல் தலைவர்களும், உலக அளவிலான பெரும் கோட்டிஷ்ரர்களான இருவரும் முயற்சிக்கிறார்கள் இதில் அரசியல்வாதிகள் சொல்லும் சிலருக்கு பல லட்சம் கோடியை கொடுக்க முடிவு செய்யப்படுகிறது.
அப்படிக் கொடுக்கும் அளவுக்கு நம்பிக்கையான பினாமி ஆட்கள் கிடைக்காததால் சிறையில் இருக்கும் முன்னாள் சிபிஐ ஆபீசர் நாகர்ஜூனாவை வெளியில் எடுக்கிறார்கள். அவர் வந்து பிச்சைக்காரர்களை தங்கள் பினாமியாக மாற்றுகிறார்கள்.
அதில் பிச்சைக்காரரான தனுஷும் ஒருவர்.அவர் 10 ஆயிரம் கோடிக்கு உரிமையாளராக மாறுகிறார்.நான்கு பேரில் எல்லோரும் கணக்கிலிருந்தும் பணம் பரிமாற்றம் ஆகிறது. ஆனால் தனுஷ் பங்கு மட்டும் பரிமாற்றம் ஆகவில்லை. இந்த நிலையில் அவர் நடக்கும் விபரீதங்களை புரிந்து கொண்டு தப்பித்து விடுகிறார். அவரை பிடிக்க அதிகாரா பலத்துடன் போலீஸ் நாகார்ஜுனா ஆகியோர் துரத்துகிறார்கள். மாட்டினாரா தனுஷ் என்பதை இயக்குனர் சேகர் கம்மூலா பரபரப்பாக சொல்லியிருக்கிறார்.
தனுஷ் அடித்து தூள் பரத்தியிருக்கிறார். பரிதப்பாக்குரலுடன் கோட் சூட் போட்டும் மாற்றிக் கொள்ள முடியாத அந்த உடல் மொழியுடனும் அழுக்கு தோற்றத்தில் வந்து அனவரின் மனதிலும் குடி புகுந்து கொள்கிறார்.
இதில் ராஷ்மிகாவுடனான சந்திப்பில் படம் இன்னும் சுவராஸ்யத்துடன் நகர்கிறது. ராஷ்மிகாவும் வெகு இயல்பாக நடித்திருக்கிறார். மிடில் க்ளாஸ் பெண்ணாக அவரின் முகத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அர்ப்பணிப்போடு நடித்திருக்கிறார்.
நாகார்ஜூனா சிபிஐ அதிகாரியாக தன் குடும்பக்கஷ்டத்திற்காக கொள்ளை கும்பலுடன் கைகோர்ப்பதும், ஸ்கேம் செய்ய சம்மதிப்பதும் நெருடல்.சுனைனா கணவன் சொல்வதை கேட்கும் அப்பாவி மனைவியாக இருக்கிறார்.
வில்லன் கும்பல் மிரட்டுகிறது.பல காட்சிகள் பிரமாண்டமாக நடப்பு அரசியல் கட்சிகளின் உருவத்தையும், தொழிலதிபர்களும் நினைவுக்கு வருகிறார்கள்.
காட்சிகளின் பிரமாண்டம், திரைக்கதையில் வேகம் படத்தை சுவராஸ்யப்படுத்தியிருக்கிறது. முதல் பாதியில் யூகிக்க முடியாத பல காட்சிகள் திரையிலிருந்து கண்களை எடுக்க முடியவில்லை.
இரண்டாம் பாதியில் இன்னும் வேகம் என்று சேகர் கம்முலாவின் திரைக்கதை படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையும் பாடலும் ஆட்டம் போட வைக்கிறது. தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகக் கொண்டாட்டத்தை கொடுத்திருக்கும் குபேரா, தனுஷின் ஹிட் பட்டியலில் சேரும்.
ஆனால் படத்தில் பல காட்சிகள் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு ஹீரோயிசமாக செய்திருப்பதால் அப்படியே மசாலா வாடை.