திண்டுக்கல் மாவட்டத்தில் சுப்ரமணியபுரம் என்ற கிராமம். முழுக்க முழுக்க ஹிந்துக்கள் மட்டுமே வசிக்கும் பகுதி., நாளடைவில், கனிசமான மக்கள் அருகில் உள்ள யோக்கோபுரம் என்ற கிறிஸ்தவ கிராமத்திற்கு குடியேறுகின்றனர். அவர்கள் கிறிஸ்தவர்களாக மதமும் மாறிவிடுகிறார்கள்.
அப்படியாக சிறு வயதிலேயே அங்கு குடியேறி சென்றவர் தான் நாயகி சாயா தேவி. கிறிஸ்தவராக மாறினாலும், தனது நினைப்பு முழுவதையும் சுப்ரமணியபுரம் மீது தான் வைத்திருக்கிறார் சாயா தேவி. காரணம், தான் காதலிக்கும் காதலனான விமல், அக்கிராமத்தில் இருக்கிறார் என்பதால்.
தொடர்ந்து இரண்டு கிராமத்தில் அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
வழக்கை விசாரிக்க காவல் அதிகாரி இசக்கி கார்வண்ணன் அங்கு வருகிறார். இந்த கொலையில் யார் யார் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் திருப்பங்கள் . இதில் அதிர்ச்சியான பல சம்பவங்கள் நடக்கின்றன. இதில் சம்பந்தப்பட்ட வர்களை விசாரித்தபோதுதான் இந்த கொலைகளை செய்வது ஆத்மாவாக இருக்கும் இருவர் என்பது தெரிகிறது.
விமல் சாயா தேவி இருவரும் மர்மமாக வந்து போகிறார்கள். இவர்கள் நடிப்பில் எந்த குறையும் இல்லாமல் போகிறது. அவ்வப்போது கண்களை உருட்டி பயம் கொள்ள வைக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் படம் முழுவதும் விசாரணை அதிகாரியாக வருகிறார். அவருக்கும் கிராமத்து மக்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு முட்டிக்கொள்வதும் நடக்கிறது.
கிறிஸ்துவ பாதிரியாராக வரும் எம்.எஸ். பாஸ்கர் கடுகடுப்பாக இருக்கிறார். மனோஜ்குமார் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினாலும் சாமி ஆடுவது வித்தியாசமாக இருக்கிறது.; ஆனால் பிற மதங்களை புண்படுத்துவது போல இதை காட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம்.
போலீஸ்காரர்களாக வரும் காதல் சுகுமார், ஆறுபாலா போன்ற நடிகர்கள் அனைவருமே இயல்பை விட நடிப்பை சற்று மீட்டர் அதிகமாகவே கொடுத்திருக்கின்றனர். பாதிரியாராக வரும் எம் எஸ் பாஸ்கரை காமெடியாக சித்தரித்திருக்கிறார் இயக்குனர்.
கூல் சுரேஷ், அருள்தாஸ், ஸ்ரீரஞ்சனி, மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா, விமல்ராஜ், மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
சுவாரஸ்யமில்லாத திரைக்கதை நம்ப முடியாத காட்சிகள் ஆழமில்லாத கதாபாத்திரங்கள் என்று படம் முழுவதும் ஓட்டைகள். க்ளைமேக்ஸ் காட்சி மட்டும் மிரட்டும் பாடல் ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் சுகுமார் பணிகள் கவனிக்க வைக்கிறது. அதோடு அவரது வில்லத்தன கேரக்டர் நன்றாக வந்திருக்கிறது. அவருக்கு தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் ரசிக்க வைப்பார் . பேய் படமாகவும் இல்லை. பக்தி படமாகவும் இல்லை.