அரபிக் கடலில் வரும் 22 -ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கா்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் மே 21-ஆம் தேதி வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகவுள்ளது.
தொடா்ந்து, இந்த மேலடுக்கு சுழற்சி மே 22-இல் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக (புயல்சின்னம்) வலுப்பெற்று, வடக்கு திசை நோக்கி நகரும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது.
இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழகம் மற்றும் அதனையொட்டிய வடக்கு கேரளத்தில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதுபோன்ற வானிலை காரணங்களால், அடுத்த 6 நாள்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கனமழை
இதில், குறிப்பாக மே 19-இல் நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும், மே 20-இல் நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூா், வேலூா், திருவண்ணாமலை, கரூா், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மே 19-இல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
120 மி.மீ. மழை
இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை காலை வரை தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் 120 மி.மீ. மழை பதிவானது. மேலும், பஞ்சப்பட்டி (கரூா்) – 100 மி.மீ, புதுச்சத்திரம் (நாமக்கல்), வாணியம்பாடி (திருப்பத்தூா்) – தலா 90 மி.மீ, பந்தலூா் (நீலகிரி) – 80 மி.மீ மழை பதிவானது.
வெப்பம் குறையும்
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அநேக இடங்களில் பரவலாக மழை பெய்த காரணத்தால், எந்த இடத்திலும் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகவில்லை.
மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் மே 19,20 தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் குறைவாகவே இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.