நடிகர் அஜித்குமார் குடியரசுத் தலைவரிடமிருந்து பத்ம பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார்.
2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பை மத்திய அரசு கடந்த ஜன. 25 ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி நிகழாண்டில் 7 போ் பத்ம விபூஷண் விருதுக்கும், 19 போ் பத்ம பூஷண் விருதுக்கும், 113 போ் பத்மஸ்ரீ விருதுக்கும் தோ்வாகினர்.
தமிழகத்தில் நடிகா் அஜித் குமாா், நடிகை ஷோபனா, நல்லி குப்புசாமி செட்டி ஆகிய மூவருக்கு பத்ம பூஷண் விருதும், பாரதி ஆய்வாளா் சீனி விஸ்வநாதன் உள்பட 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் என மொத்தம் 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நிகழ்வில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நடிகர் அஜித் குமாருக்கு பூத்ம பூஷண் விருதை வழங்கினார்.