No menu items!

நயன் தாராவின் திருமண டாக்குமெண்ட்ரி தீபாவளிக்கு தயார்

நயன் தாராவின் திருமண டாக்குமெண்ட்ரி தீபாவளிக்கு தயார்

நடிகைகள் தங்கள் திருமணங்களை ஆடம்பரமாக நடத்துவது வழக்கம். ஆனால் சமீபகாலமாக சில ஓடிடி நிறுவனக்களிடம் திருமணம் நடத்தும் பொறுப்பை ஒப்படைத்து விடுகிறார்கள். இதற்கு தனியாக பல கோடிகளைக் கொடுக்க தயாராக இருக்கிறது ஓடிடி நிறுவனங்கள். அப்படி கடந்த ஆண்டுகளில் மட்டும் பாலிவுட்டில் பல திருமணங்கள் நடந்து முடிந்துள்ளன. தமிழில் அப்படி நடந்த திருமணம் நயன் தாராவின் திருமணம்தான்.

இந்த திருமணத்தை நெட் பிளிகஸ் 15 கோடி கொடுத்து வாங்கியதாக சொல்லப்பட்டது. ஆடம்பரமாக நடந்த இந்த திருமணம் முழுவதும் நெட்பிளிக்ஸ் பதிவு செய்தது. இதனை ஒளிபரப்பு செய்ய நாளும் பார்க்கப்பட்டது. ஆனால் இன்றுவரைக்கும் அது ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இதை சில மாதங்களுக்கு முன் இணையத்தில் விமர்சனமாக வைத்தார்கள். தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் நடந்திராத அடம்பர நிகழ்வாக இது பார்க்கப்பட்டது.

நயன் தாரா விக்னேஷ் சிவன் இருவருக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்து இருவரும் நடக்கும் நிலையில் வந்து விட்டார்கள். இன்னமும் அந்த நிகழ்ச்சி நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இந்த நிலையில் இதனை மிகப்பெரிய டாக்குமெண்ட்ரியாக மாற்றியிருக்கிறார்களாம். சினிமா உலகின் மிகப்பெரிய இயக்குனர்கள், டெக்னீஷியன்கள் அனைவரும் நயன் தாராவை பற்றி புகந்து பேசும் காட்சிகளையும் பதிவு செய்திருக்கிறார்கள்.

கேரளாவில் தனியார் கேபிள் டிவி தொகுப்பாளர் தொடங்கி முதல் இடத்தில் இருக்கும் ஹீரோயின் வரை, காதல் முதல் திருமணம் குழந்தைகள் நடப்பது என்று படம் நிறைவு பெறுமாம். இதில் காதலர்களாக உலகம் சுற்றிய நாட்கள் வீடியோவாக இடம் பெறுகிறதாம்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ நானும் ரௌடிதான்’படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து சமூகவலைத்தளத்தில் இருவரும் பதிவிட்டிருந்தனர்.

நயன்தாரா இது குறித்துப் பதிவிட்டதில் இப்ப“என் வாழ்க்கையை ஆசீர்வதிக்க வந்த படம், 9 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வெளியான ‘நானும் ரௌடி தான்’மக்களிடமிருந்து புதிய அன்புக் கிடைத்தது, இந்த பாசம் கிடைக்கக் காரணம் விக்னேஷ் சிவன் அவருக்கு நன்றி சொல்ல வார்த்தையால் மட்டுமல்லமால் என் வாழ்க்கையிலும் நன்றி சொல்ல வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

நயன்தாரா இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்த சில நிமிடங்களிலே பல மில்லியன் ரசிகர்கள் நயன்தாரவை பின் தொடர ஆரம்பித்தனர்.இதனைத் தொடந்து நயன்தாரா தொடர்ந்து விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களின் இரட்டை குழந்தைகளுடன் வெளியில் செல்லும்போது அங்கு எடுக்கும் போட்டோஸ் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை தன்வசம் கொண்டுவரத் தொடங்கினார்.

இப்போது அடுத்த கட்டமாக தீபாவளி அன்று நயன் தாரா பியரி டால் என்ற தலைப்பில் ஒளிபரப்ப இருக்கிறார்கள் என்ற தகவல் வருகிறது.

நயன் தாரா ரசிகர்களே தயாரா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...