No menu items!

மீண்டும் சேரும் தனுஷ் – ஐஸ்வர்யா!

மீண்டும் சேரும் தனுஷ் – ஐஸ்வர்யா!

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையிலிருந்து பிரிந்து வாழ்வதாக அறிவித்து பல ஆண்டுகள் கடந்து விட்டன. இருவரும் தனித்தனியாக தங்கள் பாதைகளீல் சினிமாவில் பயணீக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் சுமார் 20 வருடங்கள் ஒற்றுமையான நட்சத்திர ஜோடிகளாக வாழ்ந்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்கு அடையாளமாக யாத்ரா – லிங்கா என இரண்டு மகன்களும் பிறந்தனர். இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு, விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக கூறிய தகவல், ரசிகர்களை மட்டும் இன்றி திரையுலகிலும் பரபரப்பாக பேசப்பட்டது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே உள்ள பிரச்சினையை தீர்த்து வைத்து இருவரையும் மீண்டும் இணைக்க அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சித்தனர். ஆனால் இருவருமே விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்து விட்டதாக தகவல் வெளியானது.

இவர்களுடைய விவாகரத்துக்கு காரணம், தனுஷ் ஹீரோயின்களுடன் நெருங்கி பழகி வருவது என கூறினாலும், ஒரு சில ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் குடும்பத்தினரை மதிப்பதில்லை என்பது தான் காரணம் என தெரிவித்தனர். ஆனால் இதுவரை தனுஷோ அல்லது ஐஸ்வர்யாவோ ஒருமுறை கூட தங்களுடைய விவாகரத்து பற்றி வெளிப்படையாக பேசியது இல்லை.

மேலும் ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் குழந்தைகளுக்காகவாவது சேர்ந்து வாழ வேண்டும் என குடும்பத்தினர் விருப்பப்பட்டனர். இவருக்குள்ளும் சமாதான பேச்சு வார்த்தைகள் நடந்த நிலையில், இருவருமே விவாகரத்து முடிவில் உறுதியாக இருந்ததாக தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில், விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார். அக்டோபர் 6-ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுதாரரான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், இவர்களுடைய விவாகரத்து வழக்கை அக்டோபர் 19ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இந்த நிலையில் , ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் தங்களுடைய விவாகரத்து முடிவை கைவிடும் எண்ணத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

ரஜினிகாந்தின் உடல்நலக்குறைவுக்கு குடும்ப பிரச்சனைகளும் ஒரு காரணம் என்று சில விவாதங்கள் நடந்து கொண்டிருந்த நேரத்தில், ரஜினிகாந்தின் நிம்மதியை கருத்தில் கொண்டு ஐஸ்வர்யா தன்னுடைய விவாகரத்து முடிவை கைவிடலாம் என்கிற யோசனையில் உள்ளாராம். அதே போல் ஐஸ்வர்யா – தனுஷ் மகன்களின் ஆசையும் அப்பா – அம்மா இருவரும் இணைந்து வாழ வேண்டும் என்பதே என கூறப்படுகிறது. ரஜினிகாந்துக்கு வேட்டையன் பட வாழ்த்து கூறியது மட்டும் இன்றி.. ஐஸ்வர்யா படம் பார்த்த அதே தியேட்டரில் தான் தனுஷும் படம் பார்த்துள்ளார். இதையெல்லாம் பார்க்கும் போது மனதளவில் இருவரும் சேர்ந்து வாழ தயாராகி விட்டதாகவும், கூறப்படுகிறது.

இதனால் இன்னும் சில நாட்களில் போயஸ் கார்டன் பகுதியில் இருக்கும் தனுஷ் வீட்டில் ரஜினி தனது குடும்பத்தினருடன் ஒன்று சேர்வார் என்று தெரிகிறது. இதனால் திரையுலகில் பரபரப்பு ஏர்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...