No menu items!

கோபத்தில் விஜய் சேதுபதி – கலங்கும் போட்டியாளர்கள்

கோபத்தில் விஜய் சேதுபதி – கலங்கும் போட்டியாளர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தை கடந்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த வாரத்தில் ஒவ்வொருவரையும் அழைத்து கடுமை காட்டி பேசியிருந்தது கவனிக்க வைத்திருக்கிறது. கடந்த நாட்களில் என்ன நடந்தது. யார் யார் என்ன என்ன பேசினார்கள் என்பதையெல்லாம் விஜய் சேதுபதி புட்டு பட்டு வைத்தார். பலருக்கும் ஷாக். குறிப்பாக அருண், ரவீந்தர், சாச்சனா என எல்லோரையும் லெப்ட் ரைட் வாங்கியது பார்வையாளர்களிடம் கைதட்டல் பெற்றது. ரவீந்தர் சந்திரசேகர் எலிமினேஷன்காக விளையாடிய விளையாட்டில்… சில போட்டியாளர்கள் அவர் சொல்லியதை சரியாக கவனிக்காமல் அவர் மீது பழி போட்டதும், விஜய் சேதுபதி இதை குறிப்பிட்டு பேசியதும், ரவீந்தரை கலங்கச் செய்தது. அதேபோல் ஆர் ஜே ஆனந்தி ரவீந்தர் சந்திரசேகர் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே அனைவரையும் வேலை வாங்கி கொண்டிருப்பதாக கூறிய போது அது பர்சனலாக ரவீந்தர் சந்திரசேகரின் உணர்வுகளை சீண்டிப் பார்த்தது.இதனால் தன்னுடைய மனைவி மகாலட்சுமி சொன்னது நிஜம் ஆகிவிட்டது என வீட்டிற்குள் கண்ணீர் வடித்தார்.

மகாலட்சுமி தன்னுடைய கணவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், அவருடைய எடை மற்றும் அவர் ஒரு சில விஷயங்களில் படும் சிரமங்களை பார்த்து.. ரசிகர்கள் குறைந்த வாக்குகளுடன் இவரை வெளியேற்றி உள்ளதாக தெரிகிறது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் போட்டியாளராக இருக்கும் ரவீந்தர் சந்திரசேகர், ஒரு நாளைக்கு மட்டும் சுமார் ஐம்பதாயிரம் சம்பளமாக பெற்று வந்த நிலையில், 3 லட்சத்து 50 ஆயிரம் தொகையுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.

ரவீந்தரை தொடர்ந்து இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்று உள்ளது. இதில் நாமினேட் ஆனவர்களின் விவரம் புரமோவில் வெளியாகி உள்ளது. அதன்படி அதிகப்படியான போட்டியாளர்கள் ஜெஃப்ரியை தான் நாமினேட் செய்து இருக்கிறார்கள். கொஞ்சம் இடம் கொடுத்தா டூமச்சா யூஸ் பண்ணிக்கிறான் என சொல்லி செளந்தர்யா, தர்ஷா குப்தா, சாச்சனா நமிதாஸ் ஆகியோர் கானா ஜெஃப்ரியை நாமினேட் செய்து இருக்கிறார்கள்.

ஜெஃப்ரிக்கு அடுத்தபடியாக ரஞ்சித்தை சுனிதா, ஆர்.ஜே.ஆனந்தி, தர்ஷிகா ஆகியோர் நாமினேட் செய்துள்ளனர். அவர் எதையும் ஓப்பனாக பேசமாட்டிக்கிறார் என்று சொல்லி அவரை நாமினேட் செய்துள்ளனர். பின்னர் ஆண் போட்டியாளர்களான ரஞ்சித், அர்னவ், தீபக் ஆகியோர் செளந்தர்யாவை நாமினேட் செய்துள்ளனர். இறுதியாக வயசுக்கு தாண்டி சில விஷயங்களை பேசுவதாக கூறி சாச்சனாவை விஜே விஷால் மற்றும் சத்யா ஆகியோர் நாமினேட் செய்திருக்கிறார்கள்.

ஆனால் சுனிதாவிற்கு பார்வையாளர்களின் ஆதரவு தொடர்ந்து இருந்து வருகிறது. அதனால் ரவீந்தரின் கணிப்பு சரியாக இருக்குமா என்று வரும் நாட்களில் தெரிய வரும். அப்படி நடந்தால் சுனிதா டைட்டில் வின்னர்களுக்கு கடும் போட்டியாக இருப்பார் என்பது மட்டும் இப்போதைக்கு சொல்லலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...