No menu items!

சேர்ந்து வாழ விரும்பும் ஆர்த்தி – ரவி என்ன செய்யப் போகிறார்?

சேர்ந்து வாழ விரும்பும் ஆர்த்தி – ரவி என்ன செய்யப் போகிறார்?

ஜெயம் ரவி – ஆர்த்தி விவகாரத்தின் அடுத்த கட்டமாக ஆர்த்தியின் புதிய கடிதம் வெளியாகியிருக்கிறது. ஜெயம் ரவிக்காக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு, என் மௌனம் வெளிப்பாடாக இருப்பது… என்னுடைய பலவீனமோ, அல்ல குற்ற உணர்ச்சியோ அல்ல. என்னுடைய சுயமரியாதையை கடைபிடிக்கிறேன். உண்மையை மறைக்க விரும்பி, என்னை மோசமாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு பதிலளிப்பதை தவிர்ப்பதற்காகவே மெளனமாக இருக்கிறேன். அதே நேரம் நீதித் துறை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

ஒருமனதாக விவாகரத்து பெற்றதாக வெளியான அறிவிப்பை கண்டு அதிர்ச்சி அடைந்து, ஒரு தலைபட்சமாக இது நடக்கிறது என்பதை தெரிவித்தேன். இந்த விஷயத்தில் தனிப்பட்ட உரையாடலை நான் எதிர்பார்க்கிறேன். ஆனால், இன்று வரை அது மறுக்கப்படுகிறது. திருமணத்தின் புனிதத்தன்மையை நான் ஆழமாக மதிக்கிறேன். யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் பொது விவாதங்களில் ஈடுபடமாட்டேன். கடவுளும் என்னை ஆசீர்வதிப்பார் என நம்புகிறேன் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.

இந்த விவகாரத்தை சுமூகமாக கையாளாமல் அவரது அம்மா சுஜாதா இருவரும் கடினமாக்குவதாக தெரிகிறது. சுஜாதா தான் தயாரித்த படங்கள் மூலமாகத்தான் ஜெயம் ரவிக்கு ஒரு பெரிய பிரேக் கிடைத்தது. அவரது நடிப்பு வெளியே தெரிந்தது என்று பேசியிருப்பதாக கூறப்படுகிறது. இது ஜெயம் ரவியை இன்னும் கோபப்படுத்தியிருக்கிறது. அடங்க மறு, பூமி, சைரன் ஆகிய படங்கள்தான் இவர்கள் ஜெயம் ரவியை வைத்து தயாரித்தது. இதில் அங்க மறு படம் மட்டும் சுவாரஸ்யமாக இருந்தது.
இப்படியான சூழலில்தான் ராஜேஷ்.எம் இயக்கும் பிரதர் என்ற படத்தின் படப்பிடிப்பில் நடந்த சம்பவங்களை உதவி இயக்குனர் ஒருவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். இந்த படப்பிடிப்பு நேரத்தில்தான் ரவி – ஆர்த்தி இருவருக்கும் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது.

ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் வந்தபிறகு பெரிய டென்சனுடன் இருப்பார். அவருடன் பேசவே தயக்கமாக இருக்கும். அவர் இங்கு இருப்பதையும் என்ன செய்கிறார் என்பதையும் யாரோ ஒருவர் யூனிட்டுக்கே தெரியாமல் யாருக்கோ தகவல் சொல்லிக்கொண்டே இருப்பார். இதனை ரவிக்கு வீட்டிலிருந்து வரும் போன் மூலம் தெரிய வந்திருக்கிறது. இதனால் படப்பிடிப்பை இயக்குனர் ஊட்டிக்கு மாற்றினார். 40 நாட்கள் ஊட்டியில் சூட்டிங் நடந்தது. இந்த நாட்களில்தான் ரவி ரிலாக்ஸாக இருந்தார். அப்படித்தான் முழு படப்பிடிப்பையும் முடித்தோம். இதனால் யாரை நம்புவது யார் தகவல் கொடுக்கிறார்கள் என்பது தெரியாமல் தவித்தார் ரவி. இது மாதிரியான சூழலில் யாருமே கோபமாவார்கள் இல்லையா ? அப்படித்தான் இந்த விவகாரம் உச்சத்தை அடைந்து விட்டது என்றார் அவர்.

இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி தன்னுடைய தோழி கெனீஷாவுடன் மும்பையில் இருப்பதாகக்கூறப்படுகிறது. அப்படி வெளியான ஒரு வீடியோவில் ரவி மும்பையில் இருக்கும் காட்சி வெளியாகியிருக்கிறது.

இதனை குடும்பத்தின் பெரியவர்களை வைத்துத்தான் பேச வேண்டும். ஆளுக்கு ஒரு அறிக்கை கொடுத்து நிலமையின் வெப்பத்தை அதிகரிக்கக்கூடாது. கூட்டுக் குடும்ப மனோபாவத்தோடு அணுகி இருதரப்பும் பாதிக்கபடாமல் வழி வகை செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...