No menu items!

ரோகிணிக்கு குவியும் பாராட்டு; நடவடிக்கை பாயுமா?

ரோகிணிக்கு குவியும் பாராட்டு; நடவடிக்கை பாயுமா?

தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் ஒன்று சேர்ந்து எடுத்து முடிவு நன்றாகவே ஒர்கவுட் ஆகியிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தினர் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் நடிகைகளை அவதூறாக பேசும் சிலரை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கபப்ட்டது. இதன்படி அப்படி அவதூறு பேசியவர்களின் சிலரை நோக்கி நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கத்தின் சார்ப்பாக ஒரு குழு அமைக்கபப்ட்டது. இதன் பொறுப்பில் நடிகை ரோகிணியை நியமித்தார்கள். அவரும் முதல் கட்டமாக மருத்துவர் காந்தராஜ் மீது சென்னை காவல்துறை மத்திய குற்றப்புலனாய்வு பிரிவில் புகார் கொடுத்திருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு காந்தராஜ் பேசிய வீடியோவில் நடிகைகளை பற்றி ஆபாசமாக பேசியதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து சிசிபி காவல் பிரிவில் காந்தராஜ் ஆஜராக வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி காந்தராஜ் மன்னிப்பு கடிதம் எழுதிக்க்கொடுத்துள்ளார். அதில் நடிகைகள் குறித்து வேண்டுமென்றே நான் அப்படி பேசவில்லை, ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு நான் அளித்த அந்த பேட்டியில் நான் நடிகைகள் குறித்து பேசியது தவறு தான். யாருடைய மனமும் புண்பட வேண்டும் என்று நான் அவ்வாறு பேசவில்லை. இருப்பினும் எனது கருத்துக்காக நான் வருத்தப்படுகிறேன்” என்று கூறியுள்ளார். பெரிய திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த விவகாரத்தில் காந்தராஜ் கடிதம் கொடுத்திருப்பது நிலைமையை சுமூகமான சூழலுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

இந்த நிலையில் ஒட்டுமொத்த நடிகர், நடிகைகள் அனைவரும் நடிகை ரோகிணிக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். அவர் எடுத்த சட்ட நடவடிக்கைக்குக் கிடைத்த பெரிய வெற்றி என்று இதைப்பார்க்கிறார்கள். இன்னும் அடுத்தடுத்த புகார்கள் கொடுக்கவும் ரோகிணி தயாராகி வருகிறார் என்கிறார்கள்.

ஆனால் பொதுவாக மக்கள் மத்தியில் மருத்துவராக இருக்கும் ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பது எளிதாக இருந்தது. அதே சமயம் திரைத்துறை சார்ந்தவர்கள் மீதே சில நடிகைகள் புகார் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் மீதும் இதே போன்ற நடவடிகை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக சின்மயி பாடகியாக இருந்து கொண்டு அவருக்கு நெருக்கடி கொடுத்தவர்களை அடையாளம் காண்பித்தார். இதனால் அவருக்கு தொடர்ந்து பாட வாய்ப்புக் கொடுக்காமல் மறுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சிலர் வைரமுத்து மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்கள். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று ரோகிணியை நோக்கி கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...