No menu items!

தொழிலதிபர்களாகும் பாரதிராஜா ஹீரோயின்கள்!

தொழிலதிபர்களாகும் பாரதிராஜா ஹீரோயின்கள்!

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கி திரைப்படங்களை இயக்கி வந்தவர் பாரதிராஜா. அவரது பாணி திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதற்கு முதல் காரணம் கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தியான வாழ்க்கையும் அதில் இருக்கும் யாதர்த்தமும் தான்.

இவர் தன்னுடைய கதைக்கு ஏற்ற கதாநாயகிகளைத் தேடுவதற்கு எடுத்த முயற்சிகளே சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும். ஆரம்பகட்டத்தில் தன்னுடைய திரைப்படங்களுக்கு ஹீரோயின்களாக திரையுலகின் மூத்த நடிகர்களின் வீட்டுப் பிள்ளைகள் யாராவது இருக்கிறார்களா என்பதை தேடிக்கொண்டிருப்பார். அப்படி கிடைத்தவர்தான் ராதிகா.

கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் நடிக்க கதாநாயகியாக ராதிகாவை முடிவு செய்தார். எம்.ஆர்.ராதா அவர்களின் வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் துணிந்து அவரை நேரில் சந்தித்து நடிக்க அனுமதி கேட்டு நின்றார். நடிக்க விருப்பம் இல்லாமல் இருந்தாலும் அப்பா எம்.ஆர்.ராதா சொன்னதற்காக ஒப்புக்கொண்டு இன்று தமிழ் சினிமாவில் அவரும் ஒரு அடையாளாமாகிப் போனார். திரையுலகில் தன் முத்திரை நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். தர்போது பட தயாரிப்பு, சின்னத்திரை தயாரிப்புகள் என்று கலக்குகிறார்.

நிழல்கள் திரைப்படத்தில் நடித்தவர் ராது. அமைதியான அவரது முகமே பல துயரங்களி நமக்கு சொல்லிவிடும். அப்படித்தான் கதையில் பொருந்தி போனார். பிறகு சண்முகப்பிரியன் இயக்கத்தில் ஒருவர் வாழும் ஆலயம் படத்தில் நடித்தார். அதுவும் அவரது முகத்தோற்றத்திற்கு ஏற்ற அமைதியான பாத்திரம். அதற்குப்பிறகு திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் தங்கி விட்டார்.

ரேவதி மண்வாசனை திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர். புதுமைப்பெண் படத்தில் நடித்த பிறகு அவருக்கென்று தனியாக ஒரு திரைப்பயனம் உருவானது. விருதுகளும், பரிசுகளும் அவரது திறைமைக்குக்கிடைத்தன. தனது திருமணத்திற்குப் பிறகு வீட்டுக்குள் இருந்துவிடாமல் சில திரைபப்டங்களை ஆங்கிலத்திலும், இந்தியிலும் இயக்கினார் ரேவதி. பாரதி ராஜாவின் கதாநாயகிகளில் இப்போதும் பரபரப்பாக படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தும் நபராக இருப்பவர் ரேவதி.

இதன் பிறகு அதிகம் பேசப்பட்ட பாரதிராஜாவின் கதாநாயகி பிரியாமணி சிறகுகள் முறிவதில்லை என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. போஸ்டர் வெளியிட்டதோடு அந்தப்படம் நின்று போனது. ஆனால் இன்று பிரியாமணி தேசிய விருது பெற்ற நடிகையாக பரபரப்பான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ராதா அலைகள் ஓயவதில்லை படத்தில் நடிக்க வந்தபோது, திரையுலகில் பெரிய கதாநாயகியாக வலம் வருவார் என்பதை யாரும் யூகித்திருக்க மாட்டார்கள். கிராமத்து வேடம், நகரத்துக் கதைகள் என்று இரண்டுக்கும் பொருத்தமான முகமும் , புடவை, மாடர்ன் உடைகள் என்று அணிவதற்கு ஏதுவான உடல்வாகும் இருந்ததால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல ஆண்டுகள் கொடிகட்டி பறந்தார். அடுத்தத் தலைமுறை வருவதை உண்ர்ந்து திருமணம் செய்து கொண்டு கொச்சினில் தங்கி விட்டார். அங்கு ராதாவிற்கு ஐந்து நட்சத்திர ஓட்டல் இருக்கிறது. இன்னும் சில தொழில்களில் முதலீடு செய்து அவரும் கணவரும் கவனித்து வருகிறார்கள்.

இப்படி பாரதிராஜாவின் கதாநாயகிகள் பலரும் பல்வேறு பிசினஸ் மூலம் தங்களை பிஸியாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை எல்லாம் உருவாக்கிய பிதாமகன் பாரதிராஜா திரைப்படங்கள் இயக்குவதிலிருந்து விலகி தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.

தன்னால் உருவாக்கப்பட்ட கதாநாயகிகள் எங்கு சென்றாலும் பாரதிராஜா அவர்களை திரையில் அவர்களைக் காட்டிய கதாபாத்திரங்களாகத்தான் மக்கள் முன் தெரிவார்கள். அதுதான் காலத்தை வென்ற படைப்பாளி பாரதிராஜாவுக்கு கிடைக்கும் மரியாதை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...