No menu items!

ஜெயமோகனுக்கு லிங்குசாமி பதிலடி

ஜெயமோகனுக்கு லிங்குசாமி பதிலடி

’பையா 2’ எடுத்து எப்படியாவது தனது மார்க்கெட்டை நிலைநிறுத்திவிட வேண்டுமென லிங்குசாமி கடும் முயற்சி செய்தார். எப்படியாவது கார்த்தியை நடிக்க வைத்துவிட்டால், பையா படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை எடுத்துவிடலாம் என நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் ஆர்யாவை வைத்து ‘பையா 2’ எடுக்கலாம் என திட்டமிட்டார்கள். அதுவும் நடக்கவில்லை. அடுத்து நடிகர் முரளியின் இரண்டாவது மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷை வைத்து எடுக்கும் வேலைகள் தொடங்கப்பட்டன. ஆனால் அதுவும் எடுப்படவில்லை.

இதனால் மகாபாரத கதையை அடிப்படையாக கொண்டு ஒரு திரைக்கதையை எழுதி, அதை படமாக எடுக்கும் பணிகளில் லிங்குசாமி இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுடன் இதற்கு முன்பு இணைந்த லிங்குசாமி, இந்த முறை ஜெயமோகனுடன் இணைய திட்டமிட்டு இருக்கிறார். தான் எடுக்கப்போகும் மகாபாரதத்தை அடிப்படையாக கொண்ட கதைக்கு, திரைக்கதை எழுதும் படி ஜெயமோகனிடம் லிங்கு சாமி கேட்டாராம்.

ஜெயமோகனும் திரைக்கதை இதுதான் என்று தான் எழுதியதை லிங்குசாமியிடம் கொடுத்திருக்கிறார். இதைப் படித்த லிங்குசாமிக்கு அதில் பெரிய ஆர்வம் ஏற்படவில்லை என்கிறார்கள். இதனால் ஜெயமோகனிடம் சில இடங்களில், சில திருத்தங்கள் செய்தால் நன்றாக இருக்குமென லிங்குசாமி தரப்பில் கூறப்பட்டதாம்,

ஜெயமோகன், லிங்கு தரப்பில் சொன்னதையெல்லாம் பொறுமையாக கேட்டாராம். ஆனால் பதிலுக்கு ஜெயமோகன் சொன்னதைக் கேட்டு லிங்கு தரப்புக்கு பெரும் அதிர்ச்சியாம்.

நீங்கள் சொல்ல வருவது புரிகிறது. வேண்டுமானால் நான் எழுதிய ‘வெண்முரசு’வை படியுங்கள். நீங்கள் எதிர்பார்ப்பதற்கு மேல் அருமையாக இருக்கும்; என்று ஒற்றைவரியில் பதில் சொல்லிவிட்டு அந்த பேச்சை அப்படியே துண்டித்துவிட்டாராம்.

எவ்வளவோ பார்த்துவிட்ட லிங்குசாமி கொஞ்சம் கூட அசராமல், திரைக்கதையை நாமே எழுதிவிடலாம் என்று கூறிவிட்டாராம். இதைக்கேட்ட ஜெயமோகன் அதிர்ச்சியில் என்ன செய்வதென தெரியாமல் அமைதியாகிவிட்டாராம்.


கவர்ச்சியில் மல்லுக்கட்டும் மாளவிகா மோகனன்

தமிழில் ‘பேட்ட’ படத்தில் அறிமுகமானாலும், விஜய்க்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்தாலும் இன்னும் சரியான இடம் கிடைக்காமல் அல்லாடிக்கொண்டிருக்கிறார் மாளவிகா மோகனன்.

இதனால் இவர் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் பா. ரஞ்சித் இயக்கத்தில், விக்ரமுடன் நடித்திருக்கும் ‘தங்கலான்’. இப்பட த்தின் முக்கிய காட்சிகள் 98 சதவீதம் முடிவடைந்துவிட்டன.

இதில் மாளவிகாவுக்கு அதிரடியான சண்டைக்காட்சிகளும் இருக்கிறதாம். இந்த காட்சிகளில் நடிப்பதற்காகவே சிலம்பம், உட்பட சில தற்காப்பு கலைகளை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்ட்டிருக்கிறார் மாளவிகா மோகனன்.

’’தங்கலான்’ படத்தைப் பொறுத்தவரை சும்மா கமர்ஷியல் சமாச்சாரங்களுக்காக சண்டை போடும் காட்சிகளில் நான் நடிக்கவில்லை. அர்த்தமுள்ள சண்டை காட்சிகளாக இருக்கும். கதையும் அப்படிதான். ஒரு கட்டத்தில் கதை உங்களை அந்த காலக்கட்டத்தோடு சேர்ந்து பயணிக்க வைக்கும். கத்தி, அருவா மாதிரி இல்லாமல் வெறும் கைகளால் சண்டையிடுவது எனக்கு பிடிக்கும். அதில்தான் உண்மையான வீரம் இருக்கும். தங்கலானில் எனக்கு அப்படியொரு சண்டை காட்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நிச்சயமாக இந்த ஆக்‌ஷன் காட்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என நான் எதிர்பார்க்கிறேன்’ என்கிறார் மாளவிகா மோகனன்.

இப்படி ஆக்‌ஷன் ஆக்‌ஷன் என்று சொன்னாலும், சமூக ஊடகங்களில் இவர் பதிவிடும் கவர்ச்சிகரமான ரீல்களினால்தான் மாளவிகா மோகனனுக்கு ரசிகர்கள் அதிகம்.

இப்படி கவர்ச்சி காட்டும்விதமாக புகைப்படங்கள், காணொலிகளை அடுத்தடுத்து ஏற்றிக்கொண்டே இருக்கிறீர்களே. கவர்ச்சி இல்லாமல், உடலழகைக் காட்டாமல் கொஞ்சம் நடிப்பை மட்டும் நம்பி நடிக்க மாட்டீர்களா என்று கேட்டால், ‘எனக்கு க்ளாமர் போட்டோ ஷூட் ரொம்ப பிடிக்கும். அவ்வளவுதான். இதில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா’ என்று எதிர்க்கேள்வி கேட்டு பஞ்சாயத்தை முடித்துவிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...